33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
625.500.560.350.160.300.053.800.90 15
ஆரோக்கிய உணவு

உயிருக்கே ஆபத்து! தப்பித்தவறி கூட அகத்தி கீரையை இப்படி சாப்பிடாதீங்க!…

அகத்திக்கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதில் 8.4 சதவீதம் புரதச்சத்து 1.4 சதவீதம் கொழுப்புச்சத்து 3.1 சதவீதம் தாது உப்புகள் மட்டுமின்றி மாவுச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் ஏ சி ஆகிய சத்துகளும் இருக்கின்றது.

பொதுவாக அகத்திக் கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டன. இன்னொன்று சிவப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை பூ பட்டை வேர் ஆகியவை மருந்தாக பயன்படுகின்றது.

அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். மலச்சிக்கலை தடுக்கும். வயிற்றுப்புண் குணமாகுமாம்.

சுத்தம் செய்யப்பட்ட அகத்தி கீரையுடன் சின்ன வெங்காயம் மிளகு சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றை சேற்றுப்புண்களில் பூசி வந்தால் விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது கீரையை மட்டும் அரைத்து தடவி வந்தால் விரைவில் ஆறுமாம்.

அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறி விடும்.

அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவி செய்யும். இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகுமாம்.

அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையுமாம். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.

தேமல் வந்த இடங்களில் இதன் இலையை தேங்காய் எண்ணெயை விட்டு வதக்கி விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும். இந்த கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடுமாம்.

அகத்திக் கீரையைப்போல அவற்றின் பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் தலைசுற்றல் சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்சினைகள் சரியாகுமாம்.

அகத்திப்பூவுடன் மிளகு சீரகம் ஓமம் பூண்டு வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு கட்டுக்குள் வந்து விடும்.

அகத்திக்கீரையை இப்படி சாப்பிடகூடாது

மருந்துகளை முறிக்கும் தன்மை அகத்திக்கு உண்டு. எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக்கூடாது. பொதுவாக இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடக்கூடவே கூடாது.
அப்படிச் சாப்பிட்டால் மருந்தாக செயல்படவேண்டியது அதற்கு எதிராக செயல்பட்டு சொறி சிரங்கை ஏற்படுத்திவிடும் என்பார்கள்.
அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. மது அருந்திவிட்டும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கின்றன.

Related posts

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகப் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய மருத்துவம் குணம் கொண்ட மக்காச்சோளம்..!

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில எழுந்ததும் இந்த 5 விதைகளை சாப்பிட்டாலே நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு கூடும்!

nathan

உங்கள் உதடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றனவா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தெரிஞ்சிக்கங்க…சாப்பாடு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

nathan

நீங்கள் வாரம் ஒரு நாள் கோழி நெஞ்சுக் கறி சாப்பிடுங்க! காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

nathan

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

சர்க்கரையை விட வெல்லம் நல்லது

nathan

நெஞ்சு சளிக்கு ‘டாடா’ சொல்லணுமா? அப்ப இத பொடி பண்ணி தேன் கலந்து சாப்பிடுங்க…

nathan

களைப்பைப் போக்கும் கற்றாழை!

nathan