Other News

தெரிஞ்சிக்கங்க…கற்பூரத்தில் எவ்வளவு நன்மை இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?

கற்பூரம் நல்ல வாசனையையும் கொண்டது. இந்த வாசனையைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த கற்பூரம் தான் இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் விக்ஸில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகின்றன.

கற்பூரம் இந்த விக்ஸில் சேர்க்கப்படுவதற்கு அதன் நறுமணம் மட்டுமின்றி, மருத்துவ குணங்களும்தான் காரணம்.

கற்பூரத்தின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்

சளியைப் போக்க

கற்பூரம் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கக் கூடியது. இது நெஞ்சு சளியை இளகச் செய்து, சளியை வெளியேற்ற உதவி செய்யும்.
4-5 துளிகள் கற்பூர எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, நெஞ்சுப் பகுதியில் நன்கு சில நிமிடங்கள் தேய்த்து, அதன் பின் ஆவி பிடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
நல்ல சூடான நீரில் சில துளிகள் கற்பூர எண்ணெய் சேர்த்து கலந்து, அந்நீரால் ஆவி பிடித்தால் நெஞ்சு வலி மற்றும் இருமல் சரியாகிவிடும்.
பருக்களைப் போக்க

பருக்களைப் போக்க கற்பூரம் பெரிதும் உதவி செய்யும். குறிப்பாக இது சருமத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, கருமையான தழும்புகள் ஏற்படாமலும் தடுக்கிறது.
அதற்கு 1 கப் சுத்தமாக தேங்காய் எண்ணெயை காற்றுப் புகாத ஒரு ஜாரில் ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் கற்பூர எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் இரவில் படுக்கும் முன் முகத்தை கிளின்சரால் கழுவிய பின், முகத்தைத் துடைத்து, இந்த எண்ணெய் கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து,இரவு முழுவதும் முகத்தில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் முகத்தை கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்தால் நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button