banner image
மருத்துவ குறிப்பு

கரோனாவிற்கு கண்கள் சிவப்பதும் அறிகுறியா..? கட்டாயம் இதை படியுங்கள்

தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் முதலில் கண்களைத் தாக்குவதாக அமெரிக்க கண் சிகிச்சை நிபுணர்கள் தகவல் அளித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிகக் கொடிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. தற்போதுவரை 4 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதி தீவிரமாக கரோனா வைரஸ் பரவிவருகிறது. இந்நிலையில், அமெரிக்க கண் சிகிச்சை நிபுணர்கள் கரோனா வைரஸுக்கு புதிய அறிகுறி ஒன்றை தெரிவித்துள்ளனர்.

அதாவது, இதுவரை கரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ள மக்களில் 1-லிருந்து 3% வரை கண்கள் சிவந்து காணப்பட்டனர் என தெரிவித்துள்ளனர். மேலும், கரோனா வைரஸ் கண்கள் மூலமாகவும், கண் இமைகள் மூலமாகவும் நம் உடலிற்குள் செல்லும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதனால், இருமல், தொண்டை வறட்சி உள்ளிட்டவைகளுடன் கண் சிவப்படைந்திருந்தாலும் மருத்துவரை அணுகுவது சிறந்தது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கண்களை அடிக்கடி தொடாமல் இருக்கவேண்டும் எனவும் கண் கண்ணாடிகளை அணிந்து வெளியே செல்வது நல்லது எனவும் கூறியுள்ளனர்.-source: asia

Related posts

முதலிரவன்று பெண்களின் மனதில் தோன்றும் வேடிக்கையான எண்ணங்கள்

nathan

மாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா?.. பக்க விளைவுகள் ஏற்படும்..!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போது சிசேரியன் அவசியம்?

nathan

கொய்யா…இதெல்லாம் மெய்யா?!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின்னர் பெண்களால் வெளிக்கூற முடியாத கடுமையான வலிகள்!

nathan

பெண்கள் கருவுற்றிருப்பதை வீட்டில் கண்டறிய உதவும் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது எப்படி தெரியுமா?

nathan

60 வயதைத் தாண்டிய குழந்தைகளை எப்படி குஷிப்படுத்துவது?

nathan

இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் கொடுப்பதால் வரும் நன்மைகள் தெரியுமா ?

nathan

குடல் இறக்கம் /கர்ப்பப்பை இறக்கம். மருத்துவர் கந்தையா குருபரன்

nathan