27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
ஆரோக்கியம் குறிப்புகள்

பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்

 

பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம் உடலின் தேவையைப் பொறுத்து அனைவருக்கும் பசி உண்டாகும். சிறிதளவு மட்டுமே பசி இருக்கும் போது திரவ உணவு, கஞ்சி, கூழ், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பசி எடுக்கும் போது அனைத்து விதமான உணவுகளையும் சாப்பிடலாம்.

ஒரு பகுதியில் எந்தவிதமான சிறுதானியம் விளைகிறதோ, அதுதான் பொதுவான உணவு. அதில் நமக்கு எது பிடிக்கிறதோ, அது தனி உணவு. அந்த உணவிலும் பசியின் தன்மைதான் உணவின் வடிவத்தை முடிவு செய்யும். உடலின் தன்மையும், வெளிச்சூழலின் தன்மையும் இணைந்து தான் பசியின் தன்மையை உருவாக்கும்.

சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றுவதும், ஜில்லுன்னு எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதும், மழை நேரத்தில் ஏதாவது மொறு, மொறுவென சாப்பிடத் தோன்றுவதும் தான் பசியின் தன்மை. இது உடலின் தேவையைப் பொறுத்து ஏற்படும். அதில் முதலில் ஏற்படுவது உடலின் தேவை. அடுத்து வருவது நாக்கின் தேவை.

பசியையும், ருசியையும் பார்த்துப் பழகினாலே எந்த உணவை, எப்போது சாப்பிடலாம் என்ற புரிதல் ஏற்பட்டுவிடும். இதன்படி சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும். விலங்குகள் எதுவுமே தங்களுக்கு பசிக்காமலோ, பிடிக்காமலோ சாப்பிடுவதில்லை. மனிதன் மட்டும் தான் பசிக்காமலும், பிடிக்காமலும் கடமைக்கு மட்டுமே சாப்பிடுகிறான். மனிதனின் பெரும்பான்மையான நோய்களுக்கு இதுவே காரணம்.

Related posts

கருங்காலி மாலை ஒரிஜினல் எப்படி கண்டுபிடிப்பது

nathan

உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா ? அப்போ யார்மேலையோ தீரா வன்மம் இருக்காம்…!

nathan

வேர்கடலை கொழுப்பு அல்ல. ஒரு மூலிகை!

nathan

மனித உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைக்கும் உணவுகள்

nathan

உடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய வழிமுறை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளை சாப்பிட வைப்பதே தனிக்கலைதான்

nathan

இந்த ராசிக்காரங்க எவ்வளவு சோகமா இருந்தாலும் சந்தோஷமாக இருக்குற மாதிரி போலியா நடிப்பாங்களாம்…!

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் போது தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!!

nathan

இந்த பெண்ணை திருமணம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் -பொருத்தம் பார்ப்பது எப்படி?

nathan