28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
sdsd
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா வாரம் இருமுறை உணவில் கரிசலாங்கண்ணி கீரையை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்…!!

கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.

இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தில் நீர்த்தன்னையை உண்டாக்குவதற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம்.

ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
sdsd
இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும்.

கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.

தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா.?!

nathan

உங்களுக்கு தெரியுமா மஞ்சளை நாம் ஏன் உணவில் சேர்க்க வேண்டும்?

nathan

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வில்வ இலையை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்!….

sangika

moringa in tamil: அதிசய மரம் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள்

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் வெட்டி வேரின் நன்மைகள் என்ன ??

nathan

பெண்கள் மூக்கு/காது குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..?

nathan

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்….!

nathan

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?

nathan

உங்களுக்கு நீண்ட காலமாக பற்கள் கரையுடன் காணப்படுகிறதா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

nathan