30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
தலைமுடி சிகிச்சை

முடிகளை கருமை நிறமாக மாற்ற உதவும் எளிய டிப்ஸ்!

கூந்தலைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், அலங்கரிக்கவும் பெண்கள் செய்யும் செலவுகள் ரொம்பவே அதிகம். அவசர யுகத்தில் விற்பனையில் இருக்கும் பொருட்களில் நம்பகத்தன்மை இல்லை.

அதிகமான ரசாயன கலப்பால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு எதிர்பாராதவிதமாக, சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்திவிடுகின்றன.

இவற்றைத் தவிர்க்க இயற்கை சார்ந்த சில மூலிகைப் பொருட்கள் மற்றும் நம் இல்லங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முடியை எவ்வாறு பாதுகாத்து பராமரிப்பது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

1. நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி இயற்கையாகவே கருமை கலந்த ஊதா நிறத்தை தருவது. மருதாணி இலை சிவப்பு நிறத்தை தரும். முதலில் மருதாணி இலையினை அரைத்து தலையில் தடவி சிறிது நேர இடைவெளியில், அவுரி பொடியையும் தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை முடிகளில் கருமை நிறம் ஏறி இருக்கும்.

2. கரிசலாங்கண்ணியுடன் கறிவேப் பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி இணைத்து அரைத்து முடிகளின் வேர் கால்களில் படும்படி தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் வெள்ளை முடியின் வளர்ச்சி கட்டுக்குள் வரும்.

Related posts

பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவது எப்படி?

nathan

தலைக்கு நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!

nathan

கூந்தல் நீளமாக இல்லைன்னு வருத்தமா? உங்களுக்கு உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா தலையில் இதனை தூவினால் பொடுகுத்தொல்லை இனியில்லை!

nathan

முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேம்பு!…

nathan

பெண்களே முடி கிடு கிடுனு வளர இதை தடவுங்க…

nathan

எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க வேண்டுமா? இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க

nathan

கூந்தலின் வறட்சி போக்கி, பளபளப்பாக்க இயற்கை வழிகள்

nathan

ஆயுர்வேதம் சொல்லும் கூந்தல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி

nathan