31.6 C
Chennai
Monday, Jul 14, 2025
59d688cc5333db370c0
ஆரோக்கியம் குறிப்புகள்

எளிமையான தீர்வுகள்.!! மாதவிடாயை சுகாதாரமாக கடைபிடிப்பது குறித்து காண்போம்.

தற்போதுள்ள நிலைமையில் டாம்பூங்கள்., சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மென்சுரல் கப்கள் என்று பல விதமான முறையில் மாதவிடாய் பிரச்சனையை எளிதாக கடப்பதற்கு வாய்ப்புள்ள நிலையில்., இரத்தப்போக்கின் அளவிற்கு ஏற்றவாறு மேற்கூறிய ஒன்றில் தேர்ந்தெடுத்து செயல்படுவது சிறந்தது.

இந்த முறையில் டாம்பூன்களை உபயோகம் செய்வது சில பெண்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சில பெண்கள் நாப்கின்கள் நன்றாக இரத்தப்போக்கால் நனையாத வரை மாற்றுவதில்லை. இவ்வாறு செய்வது இரத்தப்போக்கு குறைவாக இருந்தாலும்., அதிகமாக இருந்தாலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின்களை மாற்றுவது அவசியம். உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் நாப்கின்னில் படிந்து பூஞ்சை தொற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அவ்வாறு ஏற்படும் பூஞ்சை தொற்றானது சிறுநீரக பாதையில் தொற்று., பிறப்புறுப்பில் அலர்ஜி., பிறப்புறுப்பில் தொற்று போன்றவை ஏற்படவும் வாய்ப்புள்ளது. பள்ளி மற்றும் பணிகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் பருவமடைந்த சிறுமிகள் இடைவெளி நேரத்தில் நாப்கின்களை மாற்றிக்கொள்வது அவசியம். நாப்கின்கள் முழுவதும் இரத்தத்தால் நனைந்த பின்னர் மற்றும் செயலாது தொடைப்பகுதியில் சிராய்ப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

இது போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்க நாப்கின்களை உலர்வாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். இதனை மீறியும் தொடையில் அரிப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டால் ஆன்டிசெப்டிக் தழும்புகளை தடவ வேண்டும். மாதவிடாயின் சமயத்தில் இரத்த துளிகள் பிறப்புறுப்பை சுற்றிலும் சிறு துளிகளாக வழிந்து வரும் சமயத்தில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.
59d688cc5333db370c0
அவ்வாறு ஒட்டியிருக்கும் இரத்த துளிகளை சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் ஏற்படும். நாப்கின்களை மாற்றும் சமயத்தில் சுத்தமான நீரால் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது அவசியம். பொதுவாக பெண்களின் பிறப்புறுப்பை தன்னை தானே சுத்தப்படுத்தும் திரவமானது சுரந்து பிறப்புறுப்பை பாதுகாக்கும். இதனை தவிர்ப்பதற்கு சோப்பு நீரால் பிறப்புறுப்பை கழுவ வேண்டும் என்ற அவசியமில்லை.

சோப்பு நீரில் இருக்கும் வேதிப்பொருளானது பாக்டீரியாவில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை அழித்துவிடும். பிறப்புறுப்பின் வெளிப்புறத்தில் மட்டுமே சோப்பை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்., பிறப்புறுப்பின் உள் பகுதியில் சாதாரண அல்லது இளம்சூடுள்ள நீரால் சுத்தம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பிறப்புறுப்பில் இருந்து மலவாய் வரை மேலிருந்து கீழாக துடைக்க வேண்டும். இதனை மாற்றி செய்வதன் காரணமாக மலவாய் பகுதியில் இருக்கும் கிருமிகள் பிறப்புறுப்பில் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மாதவிடாயின் சமயத்தில் கட்டாயம் காலை மற்றும் மாலை வேளையில் குளிப்பது அவசியம். மாதவிடாய் நேரத்தில் உபயோகம் செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றை உபயோகம் செய்தால் அதனை மட்டுமே உபயோகம் செய்ய வேண்டும். நாளொன்றுக்கு பிற பிற தயாரிப்பு நிறுவனத்தின் நாப்கின்களை உபயோகம் செய்தால் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புள்ளது. முடிந்தவரை இயற்கை பொருளில் ஆன பருத்தி நாப்கின்களை உபயோகம் செய்வது நல்லது.

மாதவிடாய் துவங்கும் நாட்களை சரியாக நியாபகம் வைத்து கொண்டு முன்னெச்சரிக்கையாக நாப்கின்களை கைப்பையில் வைத்திருக்க வேண்டும். மாதவிடாய் நேரத்தில் நாப்கின்களை வைத்திருப்பதன் மூலமாக பிற பிரச்சனைகளில் இருந்து எளிதாக தப்பிக்க இயலும். இதுமட்டுமல்லாது கைப்பையில் டவல் அல்லது டிசு பேப்பர்., தண்ணீர் பாட்டில்., ஆண்டிசெப்டிக் ஆயில்மெண்ட் வைத்திருப்பது அவசியம்

Related posts

முடி உதிர்வை தடுக்க எழிய வழிமுறைகள்..!தலைக்கு எண்ணெய்யை ஒரு போதும் இப்படி தேய்காதீர்கள்..

nathan

திருமணம் அன்று மழை பெய்வது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! கணவன் மனைவி சண்டையின் போது செய்ய கூடாத சில விஷயங்கள்!

nathan

useful tips.. மருதாணியை இப்படி பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளை அளிக்குமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 8 மோதிரத்துல ஒன்னு சூஸ் பண்ணுங்க, உங்க கல்யாணம் பத்தி நாங்க சொல்றோம்!

nathan

வயிற்றில் கரு உண்டாகும்போது பிறப்புறுப்பில் என்ன மாதிரியான மாற்றம் நிகழும்?…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க பணப் – பெட்டியில் இந்த பொருட்களை வெள்ளி கிழமையில் வைத்தால் செல்-வம் பெருகுமாம்!

nathan

தினசரி அசைவம் சாப்பிடுகிறீர்களா?

nathan