25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
59d688cc5333db370c0
ஆரோக்கியம் குறிப்புகள்

எளிமையான தீர்வுகள்.!! மாதவிடாயை சுகாதாரமாக கடைபிடிப்பது குறித்து காண்போம்.

தற்போதுள்ள நிலைமையில் டாம்பூங்கள்., சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மென்சுரல் கப்கள் என்று பல விதமான முறையில் மாதவிடாய் பிரச்சனையை எளிதாக கடப்பதற்கு வாய்ப்புள்ள நிலையில்., இரத்தப்போக்கின் அளவிற்கு ஏற்றவாறு மேற்கூறிய ஒன்றில் தேர்ந்தெடுத்து செயல்படுவது சிறந்தது.

இந்த முறையில் டாம்பூன்களை உபயோகம் செய்வது சில பெண்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சில பெண்கள் நாப்கின்கள் நன்றாக இரத்தப்போக்கால் நனையாத வரை மாற்றுவதில்லை. இவ்வாறு செய்வது இரத்தப்போக்கு குறைவாக இருந்தாலும்., அதிகமாக இருந்தாலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின்களை மாற்றுவது அவசியம். உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் நாப்கின்னில் படிந்து பூஞ்சை தொற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அவ்வாறு ஏற்படும் பூஞ்சை தொற்றானது சிறுநீரக பாதையில் தொற்று., பிறப்புறுப்பில் அலர்ஜி., பிறப்புறுப்பில் தொற்று போன்றவை ஏற்படவும் வாய்ப்புள்ளது. பள்ளி மற்றும் பணிகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் பருவமடைந்த சிறுமிகள் இடைவெளி நேரத்தில் நாப்கின்களை மாற்றிக்கொள்வது அவசியம். நாப்கின்கள் முழுவதும் இரத்தத்தால் நனைந்த பின்னர் மற்றும் செயலாது தொடைப்பகுதியில் சிராய்ப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

இது போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்க நாப்கின்களை உலர்வாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். இதனை மீறியும் தொடையில் அரிப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டால் ஆன்டிசெப்டிக் தழும்புகளை தடவ வேண்டும். மாதவிடாயின் சமயத்தில் இரத்த துளிகள் பிறப்புறுப்பை சுற்றிலும் சிறு துளிகளாக வழிந்து வரும் சமயத்தில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.
59d688cc5333db370c0
அவ்வாறு ஒட்டியிருக்கும் இரத்த துளிகளை சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் ஏற்படும். நாப்கின்களை மாற்றும் சமயத்தில் சுத்தமான நீரால் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது அவசியம். பொதுவாக பெண்களின் பிறப்புறுப்பை தன்னை தானே சுத்தப்படுத்தும் திரவமானது சுரந்து பிறப்புறுப்பை பாதுகாக்கும். இதனை தவிர்ப்பதற்கு சோப்பு நீரால் பிறப்புறுப்பை கழுவ வேண்டும் என்ற அவசியமில்லை.

சோப்பு நீரில் இருக்கும் வேதிப்பொருளானது பாக்டீரியாவில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை அழித்துவிடும். பிறப்புறுப்பின் வெளிப்புறத்தில் மட்டுமே சோப்பை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்., பிறப்புறுப்பின் உள் பகுதியில் சாதாரண அல்லது இளம்சூடுள்ள நீரால் சுத்தம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பிறப்புறுப்பில் இருந்து மலவாய் வரை மேலிருந்து கீழாக துடைக்க வேண்டும். இதனை மாற்றி செய்வதன் காரணமாக மலவாய் பகுதியில் இருக்கும் கிருமிகள் பிறப்புறுப்பில் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மாதவிடாயின் சமயத்தில் கட்டாயம் காலை மற்றும் மாலை வேளையில் குளிப்பது அவசியம். மாதவிடாய் நேரத்தில் உபயோகம் செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றை உபயோகம் செய்தால் அதனை மட்டுமே உபயோகம் செய்ய வேண்டும். நாளொன்றுக்கு பிற பிற தயாரிப்பு நிறுவனத்தின் நாப்கின்களை உபயோகம் செய்தால் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புள்ளது. முடிந்தவரை இயற்கை பொருளில் ஆன பருத்தி நாப்கின்களை உபயோகம் செய்வது நல்லது.

மாதவிடாய் துவங்கும் நாட்களை சரியாக நியாபகம் வைத்து கொண்டு முன்னெச்சரிக்கையாக நாப்கின்களை கைப்பையில் வைத்திருக்க வேண்டும். மாதவிடாய் நேரத்தில் நாப்கின்களை வைத்திருப்பதன் மூலமாக பிற பிரச்சனைகளில் இருந்து எளிதாக தப்பிக்க இயலும். இதுமட்டுமல்லாது கைப்பையில் டவல் அல்லது டிசு பேப்பர்., தண்ணீர் பாட்டில்., ஆண்டிசெப்டிக் ஆயில்மெண்ட் வைத்திருப்பது அவசியம்

Related posts

திருமணம் அன்று மழை பெய்வது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் கண்களில் இந்த பிரச்சனை இருந்தால், உங்களுக்கு மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று இருக்கலாம்!

nathan

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

nathan

இந்த மாதிரியான உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாதாம்!…

sangika

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அல்கஹோல் மற்றும் இரத்த சர்க்கரை பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

nathan

ஜாக்கிரதை… குழந்தையை ஒரு நிமிடத்தில் கொன்றுவிடும்….

nathan

இத படிங்க மூட்டு வலியை நீக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…!

nathan

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலையா? இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

எப்போதும் குளிக்கும் போது நல்ல ஐடியாக்கள் தோன்றுவது ஏன்? தெரிஞ்சிக்கங்க…

nathan