pregnent 2
ஆரோக்கியம் குறிப்புகள்

கர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை!….

கர்ப்ப கால மிகை வாந்தி நோயினால் அளவுக்கதிமான வாந்தி இருந்துகொண்டே இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

pregnent 2

கர்ப்ப கால மிகை வாந்தி நோய்

சாதாரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்கள் முதல் சில வாரங்களுக்கு வாந்தி எடுப்பார்கள். காலை வேளைகளில் இது ஓரிரு முறை இருக்கும். தாய்மார்களின் உடல் நிலையினை இது பாதிக்காது.

இவர்கள் நன்கு உணவினை எடுத்துக்கொள்வார்கள். மேலும், எடை குறையமாட்டார்கள். ஆனால், கர்ப்ப கால மிகை வாந்தி நோயினால் அளவுக்கதிமான வாந்தி இருந்துகொண்டே இருக்கும்.

இது, முதல் பிரசவத்திற்குத்தான் அதிகபட்சமான தாய்மார்களிடையே காணப்படும். இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இந்த கர்ப்ப கால மிகை வாந்தி நோயில், வாந்தி வரும் உணர்வும் வாந்தியும் உணவைக் கண்டால் ஒரு ருசியற்ற நிலையும் இருப்பதோடு அது சிறிது சிறிதாக அதிகரித்து அதனால் ஏற்படும் பட்டினியால் தாயின் உடல் நலத்தையே பாதித்துவிடும்.

இதனால் அத்தாய் உடல் எடையை இழப்பதோடு தோலெல்லாம் சுருங்கி, அவர்கள் செய்யக்கூடிய சாதாரண வீட்டு வேலையைக் கூடசெய்ய முடியாமல் படுக்கையில் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

நோய் முற்றிய நிலையில் அத்தாய் மிகவும் மெலிந்து? கண்களெல்லாம் குழிவிழுந்து, தோல் உலர்ந்து, கண்களெல்லாம் மஞ்சள் பூத்து, நான்கு உலர்ந்து, உதடுகள் வெடித்து இருக்கும். வயிற்றில் மேல் பகுதி வலிக்கும்.

காபி நிறத்தில் வாந்தி வரலாம். பின்னர், நோயாளிக்குச் சிறுநீர் போவதும் குறைந்து மயக்க நிலைக்கு வந்து விடுவார்கள்.

நாடித்துடிப்பு வேகமாகவும் மெல்லியதாகவும் இருப்பதோடு இரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

உடல் வெப்பம் குறைந்து முழுமையான மயக்க நிலையினை நோயாளிகள் அடைந்து இறந்துவிடும் வாய்ப்புகள்கூட உண்டு.

ஆனால், மருத்துவம் முன்னேற்றமடைந்த இன்றைய காலகட்டத்தில் இதனால் நோயாளிகளின் இறப்பு என்பது நிகழக்கூடியது அல்ல.

கர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை

இந்நோய்க்கு, சாதாரண உணவு மாற்றங்களும், நம்பிக்கை அளித்தலுமே போதுமானதாகும்.

ஆரம்பக் கட்ட கர்ப்பத்தில் வாந்தி வருவது சாதாரண நிகழ்ச்சியே என்பதை எடுத்துச் சொலி, உணவு விஷயத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும்.

நீண்ட இடைவெளிய்ல் அதிக அளவு உணவு உட்கொள்வதை விடுத்து சிறிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக உணவினைச் சாப்பிடுவது நல்லது.

அதோடு மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சாப்பிட்டாலேயே இந்நோய் குணமாகிவிடும்.

கடுமையான நோயுடைய தாய்மார்களுக்குச் சிரை (இரத்தக்குழாய்) வழியாக குளுகோஸ் கொடுக்க வேண்டியதாயிருக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…உங்கள் வாழ்க்கையில் இருந்து சிலரை வெளியேற்றுவதற்கான 10 முக்கியமான காரணங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…சுகர் பிரச்சினைக்கு தீர்வு… முந்திரியில் எவ்ளோ நன்மை இருக்குனு தெரியுமா?

nathan

உங்க வெயிட்டை குறைக்கறதுக்கு…இந்த 7 விஷயம் மட்டும் போதுங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…மனமானது சோர்ந்து போயிருக்கும் போது செய்ய வேண்டிய விஷயங்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குடும்ப தலைவிகளுக்கான சில எளிய வீட்டு குறிப்புகள்….!

nathan

கண் திருஷ்டி பாசிமணியை வீட்டில் தொங்கவிட நல்ல இடம் எங்கே?

nathan

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்!

nathan

நீங்கள் நல்ல சம்பளம் இருந்தும் பிடிக்காத வேலையில் இருக்கீங்களா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

கோடைக்காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..

nathan