30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சரும பராமரிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! தோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்

தோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. தோல் வியாதிகளா? அது சரியாகாது என்ற நிலை இப்போது இல்லை.

தோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்
பருத் தழும்பு:

பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகிச்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.

தற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக் களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

முடி பிரச்சினைகளுக்கு தீர்வு:

இன்றைய அவசர வாழ்க்கை முறையின் பரிசாக முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை பல்வேறு நோய்களால் நமக்கு என வேண்டிய முடிகள் பாதிக்கப்படுவது அதிகரித்தும் பெண்களுக்கு வேண்டாத இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட்டு அழகு சீர்குலைவதும் அதிகமாகி கொண்டே வருவதை காண்கிறோம்.

இவை ஏற்படுத்தும் மன உளைச்சல் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நன்கு புரியும். முடி சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண யாரை அணுகுவது? என்ற தெளிவு நன்கு படித்தவர்கள் மத்தியில் அறவே இல்லை என்றே சொல்லலாம். முடிக்கென்று தனி டாக்டர் கிடையாது. தோல் டாக்டரே முடி சம்பந்தபட்ட அனைத்து சிகிச்சைகளையும் முறையாக படித்து பட்டம் பெற்றவர்.

தற்போது முறையாக உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த பக்க விளைவு இல்லாத புதிய மருந்து மாத்திரைகள் முடி பிரச்சினைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்த தோல் டாக்டர்கள் அறிவுரை அவசியம். முக்கியமாக முடி வியாதிகளை சரியாக கண்டுபிடிக்கவும், காரணங் களை ஆராயவும் பயன்படும் அதிநவீன கருவிகளையும் தோல் டாக்டரால் மட்டுமே இயக்க முடியும்.

திடீர் முடி உதிர்வு:

அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும் வாய்ப்பு உண்டு. இது தானாகவே சரியாகி விடும். பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. இருந்தாலும் தோல் மருத்துவரின் நேரடி ஆலோசனையை பெறுவது நல்லது.

பரம்பரை வழுக்கை:

பரம்பரை வழுக்கைக்கும் இப்போது நல்ல மருந்து மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் யூ.எஸ்.எப்.டி.ஏ. என்ற அமெரிக்க அமைப்பின் முறையான அனுமதி பெற்ற, பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாதவை. இவற்றை தோல் டாக்டரின் அறிவுரையின்படி பயன்படுத்தினால் பரம்பரை வழுக்கையை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடலாம். இந்த மருந்துகளின் வருகையால் முடி மாற்று அறுவை சிகிச்சையின் தேவை குறைந்து வருகிறது.

பொடுகுத்தொல்லை:

பொடுகு என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது மருத்துவ அடிப்படையில் பலவகை தலை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். காரணம் தெரியாமல் பொதுவாக ஒரு எண்ணையை தேய்ப்பது பலன் தராது.

இளநரை:

முடிவேரில் இருந்து முடி உருவாகும் போது அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலானின் என்ற கருப்பு நிற பொருள் சேர்க்கப்படுவதால் முடி கருமையாக வளர்கிறது. இதில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இதிலும் பல வகைகள் உண்டு. சில சத்து மாத்திரைகளை நீண்ட காலம் தோல் டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

புழு வெட்டு:

வட்ட வடிவில் திடீரென்று உருவாகும் முடியற்ற இடங்களை புழுவெட்டு என்று குறிப்பிடுகிறோம். தலையிலோ, மீசை தாடியிலோ உருவாகும். சிலருக்கு தலையில் பெரும் பகுதி பாதிக்கப்படலாம். சிறிய அளவிலான புழு வெட்டுக்கள் தானாகவே சரியாக வாய்ப்பு உண்டு. நீங்களாக வெங்காயம் போன்றவற்றை தேய்க்காமல் தோல் மருத்துவரை அணுகி முறைப்படி சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.

ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சியின்மை:

தற்போது இந்த பிரச்சினைக்காக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத்தன்மை மற்றும் ஹார்மோன் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். முறைப்படி காரணத்தை கண்டுபிடித்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் முடி வளரச் செய்யலாம்.

தேவையற்ற முடிவளர்ச்சி:

இளம் பெண்களுக்கு பரம்பரையாக வோ, ஹார்மோன் பிரச்சினைகளாலோ, முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி ஏற் படுகிறது. அவர்கள் தேவையற்ற முடிகளை Waxing அல்லது Threading மூலம் அகற்றினால் சீக்கிரமே மீண்டும் இன்னும் பெரிதாக வளரும். தேவையற்ற முடிகளை நீக்க உலகத்தரம் வாய்ந்த Diode Laser, Long Pulse Nd YAG Laser மற்றும் Triple Wavelength Diode Laser ஆகிய மூன்றையும் சேர்த்து பயன்படுத்தும்போது முடி நீக்கம் விரைவானதாகவும், எளிமை யானதாகவும் ஆகின்றது. இதை முறையாகச் செய்யத் தெரிந்தவர் உங்கள் தோல் மருத்துவர் மட்டுமே. லேசர் முடிநீக்கம் திருநங்கைகளுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு வரப்பிரசாதம். எங்கள் மருத்துவ மனையில் ஏராளமான திருநங்கைகள் முகத்தில் முடிநீங்கி மகிழ்வுடன் செல்வதை காண்கிறோம். இந்த லேசர் வசதி உள்ள தோல் மருத்துவ மனையை அணுகினால் நிரந்தரத் தீர்வு பெறலாம். பக்க விளைவு சிறிதும் இல்லை.

பச்சை அகற்றுதல்:

சிறுவயதில் ஒரு வேகத்தில் யோசிக்காமல் நெருக்கமானவர் பெயரையோ படங்களையோ பச்சை குத்திக் கொண்டவர் களுக்கு பின்பு அதுவே பெரிய தலைவலியாகி விடுகிறது. சீருடைப் பணிகளில் சேர முடியாது. திருமண வாழ்க்கையில் விவாகரத்து வரை ஏற்படுத்தக் கூடிய சிக்கல்கள் இவற்றால் உடைந்த திருமணங்கள் பல. தற்போது எங்கள் மருத்துவமனையில் பச்சை அகற்றுவதற்கென்றே அதிநவீன Nano Second மற்றும் Pico Second Q-Switched Nd YAG Laser கருவி கள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. இவற்றின் மூலம் தோலுக்கு பாதிப்பு இல்லாமல் பச்சையை அகற்றலாம். இது தென் தமிழக மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமாகும்.

இது மட்டும் இல்லாமல் தோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. தோல் வியாதிகளா? அது சரியாகாது என்ற நிலை இப்போது இல்லை.

Related posts

முக பொலிவை மேருகூட்ட இதை தினமும் செய்து வாருங்கள்……

sangika

ஒரே மாதத்தில் வெள்ளையான சருமத்தைப் பெற வேண்டுமா? இதோ அதற்கான சில வழிகள்!!!

nathan

சருமம் காக்கும் சரக்கொன்றை…

nathan

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க இத செய்யுங்கள்!…

sangika

பெண்கள் அழகை பராமரிக்க சில வழிமுறைகள்

nathan

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா

nathan

வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள்

nathan

உங்கள் சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மூலிகைகள் :

nathan

சருமத்தை பொலிவாக்கும் புளி

nathan