30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சரும பராமரிப்பு

உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

சருமம் எப்போதும் பளிச்சென்று இருக்காதுதான். பருவ மாற்றம், வயது, உபயோகிக்கும் அழகு பொருட்கள் என ப்லவகைகளில் சருமம் பாதிக்கப்படும்.
ஆனால் நீங்கள் உங்கள் இழந்த சருமத்தை மீட்டெடுக்க அற்புதமான இயற்கை வழிகள் உண்டு. அம்மாதிரியான ஒரு குறிப்புதான் இது. உபயோகித்துப் பாருங்கள்.

தேவையானவை :
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
முட்டையின் வெள்ளைக் கரு- 1
தேங்காய் எண்ணெய் – 1 1/2 ஸ்பூன்
தேன் – அரை ஸ்பூன்

செய்முறை :
முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுத்து நன்றாக நுரைக்கும்படி அடித்துக் கொள்ளுங்கள்.

அதில் தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை மேலே குறிப்பிட்ட அளவு கலந்து கொண்டால் ஃபேஸ் மாஸ்க் ரெடி.

இந்த கலவையை உபயோகப்படுத்துவதற்கு முன் நீங்கள் முக்கியமாய் செய்ய வேண்டியது, முகத்தை கழுவுவது. முகத்தை கழுவி சுத்தமான துணியில் லேசாக ஒத்தி எடுக்க வேண்டும்.

பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் காய வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் மிகவும் மிருதுவாகும். சுருக்கங்கள் மறையும். முகம் பளபளப்பாக ஜொலிப்பதை கண்கூட உணர்வீர்கள்.

Related posts

மழை நீரால் உங்கள் சருமத்தை எப்படி சுருக்கமின்றி பொலிவாக்கலாம் என தெரியுமா?

nathan

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழத்தோல்!…

sangika

காபியை அதிகமாக குடித்தால் முகப்பரு உண்டாகிறது பெண்களே……

nathan

வெயில் காலத்தில் செய்ய வேண்டியவை

nathan

முகம் பொலிவு பெற…

nathan

கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா? அவர்கள் தங்கள் முகத்திற்கு தினமும் சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துவது தான்.

nathan

கேரள பெண்களின் அழகின் ரகசியம்

nathan

உங்க பிட்டம் அசிங்கமா சுருக்கத்தோட இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

சுருக்கம் நீங்க… இளமை நீடிக்க!

nathan