35.3 C
Chennai
Saturday, Aug 2, 2025
அழகு குறிப்புகள்

கண்களை அழகாக காட்ட

கண்களை அழகாக காட்ட

சென்சிடிவான பாகம் கண் ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு, கண்களுக்கு அதிக வேலை…. இவற்றால் கருவளையம் வந்து கண் அதான் ஜீவனையே இழந்துவிடும். கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள்.குறைபாடுகள் இருந்தால் உடனே பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுங்கள். பார்வை பாதித்தால் வயதான தோற்றம் தருமே என்று கண்ணாடி போடாமல் இருக்காதீர்கள். கண்ணாடியும் அழகுதான். வட்ட முகத்துக்கு மெல்லிய சிறிய சதுர வடிவ கண்ணாடி பொருத்தமாக இருக்கும். ஓவல் முகத்துக்கு சற்று அகலமான சதுர கண்ணாடி பொருந்தும்.

நீள முகத்துக்கு வட்ட கண்ணாடி பொருந்தும். கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள். பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும். விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.

கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம் முக அழகிற்கு தகுந்த மாதிரி புருவத்தை மாற்ற முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம்.

முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள். குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும். நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை. ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.

அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள். புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும். சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.

புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும். நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.

நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும். வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள்.

அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம். உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.

Related posts

ஏசியால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த சூப்பர் டிப்ஸ்!

sangika

சூப்பர் டிப்ஸ் பெடிக்யூர் செய்யும் முறை..பாதங்கள் அழகாக

nathan

நம் பாதங்களை எவ்வாறு காத்துக்கொள்வது?

nathan

சைமா விருது விழாவில் தங்கையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்!

nathan

தெரிந்து கொள்வோமா!மூல நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

nathan

வரதட்சணை கொடுமை! புதுமனைவியை கட்டி வைத்து அரங்கேறிய கொடுமை

nathan

யார் இவர்? நபரின் தோள்மீது சாய்ந்தபடி லொஸ்லியா புகைபடம் கசிந்தது !

nathan

அடேங்கப்பா! எலுமிச்சை தோலை பயன்படுத்தி சருமத்தை பொலிவு பெற உதவும் குறிப்புகள்…!!

nathan

ஆஸ்துமா நோயினை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர ஹெர்பல் ஜூஸ்!..

sangika