30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சரும பராமரிப்பு

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

சருமம் எப்போதும் பளிச்சென்று இருக்காதுதான். பருவ மாற்றம், வயது, உபயோகிக்கும் அழகு பொருட்கள் என ப்லவகைகளில் சருமம் பாதிக்கப்படும்.
ஆனால் நீங்கள் உங்கள் இழந்த சருமத்தை மீட்டெடுக்க அற்புதமான இயற்கை வழிகள் உண்டு. அம்மாதிரியான ஒரு குறிப்புதான் இது. உபயோகித்துப் பாருங்கள்.

தேவையானவை :
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
முட்டையின் வெள்ளைக் கரு- 1
தேங்காய் எண்ணெய் – 1 1/2 ஸ்பூன்
தேன் – அரை ஸ்பூன்

செய்முறை :
முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுத்து நன்றாக நுரைக்கும்படி அடித்துக் கொள்ளுங்கள்.

அதில் தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை மேலே குறிப்பிட்ட அளவு கலந்து கொண்டால் ஃபேஸ் மாஸ்க் ரெடி.

இந்த கலவையை உபயோகப்படுத்துவதற்கு முன் நீங்கள் முக்கியமாய் செய்ய வேண்டியது, முகத்தை கழுவுவது. முகத்தை கழுவி சுத்தமான துணியில் லேசாக ஒத்தி எடுக்க வேண்டும்.

பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் காய வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் மிகவும் மிருதுவாகும். சுருக்கங்கள் மறையும். முகம் பளபளப்பாக ஜொலிப்பதை கண்கூட உணர்வீர்கள்.

Related posts

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika

பெண்களே உங்க அக்குள் கருப்பா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பலருக்கும் தெரியாத ரகசியம் இதோ! எண்ணெய் குளியலில் இவ்வளவு ஆபத்தா?…

nathan

கருப்பா இருக்குறேன்னு ஃபீல் பண்றீங்களா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

முக அழகை பொலிவாக வைத்து கொள்ள…..

sangika

சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க.

nathan

தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும்

nathan

அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற்கு…!

nathan

சருமம் காக்கும் சரக்கொன்றை…

nathan