28.8 C
Chennai
Thursday, Aug 13, 2026
மருத்துவ குறிப்பு

பெண்களே! உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள்!. திருந்துங்கம்மா!

பெண்களே! உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள்! . திருந்துங்கம்மா!
ஆண்கள், என்ன‍தான் பெண்களுக்கு தங்களின் சக்திக்குமீறி வசதிகள் செய்து கொடுத்தும் அவர்களின் ஆசைகளை பூர்த்திசெய்தும் ஒரு தேவதை போல
பார்த்துக்கொண்டாலும் கணவன்-மனைவி இடை யே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின் போது மூக்கைச் சிந்தாத மனைவிகளைப் பார்க் காமல் இருக்க முடியாது.
மேலும் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகிறார் கள் என்பது ஆண்கள் பொதுவாக வைக்கும் புகாராகவும் உள்ளது. சில இடங்களில் விதிவிலக்காக, பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது, அது வேறு விஷயம்.
ஆனால் பெண்கள் அழும்போது அதை ஆண்கள் வெ றுக்கிறார்களாம். அழுதே காரியத்தை சாதித்து விடு கிறார்கள் என்றும் எரிச்சல்படுகிறார்களாம். மேலும் தங்களுக்கு ஏதாவது காரியம் சாதிக்கவேண்டுமானால், கர்ச்சீப்பும் கையு மாக கிளம்பி விடுகிறார்கள் பெண்கள் என்பது ஆண் களின் புலம்பலாக உள்ளது.
பெண்கள் அழும்போது ஆண்கள் சந்திக்கும் அவஸ் தைகளாக இதைக் கூறுகிறார்கள்.
ஒரு பெண் அழத்தொடங்கிவிட்டால், ஆண்களுக்கு கையும் ஓடுவதில் லையாம், காலும் ஓடுவதில்லை யாம். எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதான ப்படுத்துவது என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற் படுகிற தாம். சமாதானப்படுத்த முயன்றால் அழுகை கூடுமாம், அவர்கள்கோருவதை நிறைவேற்றுவதாக அல்லது கவனிப்பதாக உறுதியளித்தால்மட்டுமே அழுகை குறைகிறதாம்.
பொதுஇடங்களுக்கு, கடைபோன்றவற்றுக்குச்செல் லும்போதுதான் கேட்டதை அல்லது விரும்பியதை வாங்கித்தராமல் போகும் ஆண்களிடம், காரியம் சாதிக்க பலபெண்கள் பொது இடம் என்றும்பாராம ல் கண்களை கசக்குகிறார்களாம். அப்போது ஆண் களுக்கு பெரும் தர்மசங்கடமாகி விடுகிறதாம். பொதுஇடத்தில்.. தான் ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொள்ளத்தான் ஒவ் வொரு ஆணும் விரும்புவானாம்.
எனவே இதைப்பயன்படுத்தி பலபெண்கள் கண்களை கசக்கியோ அல்லது கசக்குவதுபோல நடித்தோ காரி யத்தை சாதித்துக் கொள்கிறார்களாம். இது போன்ற சம்பவங்களில் ஆண்களுக்கு செம டென்ஷனாகி விடுகி றதாம். இருந்தாலும் பொறுத்துக்கொண்டு, சரிசரி அழாதே, வாங்கித் தர்றேன் என்று பல்லைக் கடித்தபடி கூறி அமை திப்படுத்துகிறார்களாம்.
சாதாரண பிரச்சினைகளைக்கூட பெரியரேஞ்சுக்கு பில்ட ப் செய்து சீன் கிரியேட் செய்கிறார்கள் பெண்கள் என்பது பல ஆண்களின் புகாராகஉள்ளதாம். ஒண்ணுமே இல்லாத பிரச்ச னையைப் பெரிதாக்கி கண்ணீர் வடிக்கிறாங்க என் கிறார்களவர்கள். அதாவது சும்மாகேட்டால் கிடை க்காது என்று கருதும் விஷயத்தை கண் ணீர் கலந்து கேட்கிறார்களாம் பெண்கள். இதையும் பல ஆண்க ள் விரும்புவதில்லையாம்.
நேர்மையாக, நேருக்குநேர், தைரியமாக, தெளிவாக பேசி கேட்கும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக் கிறதாம். மற்றபடி கண்ணீர் விட்டு காரியம் சாதிக்க நினைக்கும் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்களாம்.

Related posts

உடலளவில் ஆண், பெண் வேறுபாடு

nathan

உங்களுக்கு மலக்குடல் புற்றுநோய் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!மருத்துவர் கூறும் தகவல்கள்

nathan

ஆஸ்துமாவுக்கு எளிய சித்த வைத்தியம்

nathan

உடல் எடை அதிகரிப்பினால் ஆண்மை குறைவு ஏற்படுமா?கட்டாயம் இதை படியுங்கள்

nathan

இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள்…

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்! கருக்கலைப்பிற்கு பின் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

nathan

முதலிரவன்று பெண்களின் மனதில் தோன்றும் வேடிக்கையான எண்ணங்கள்

nathan

பெண்களின் பிறப்புறுப்பு தூய்மை பற்றிய விஷயங்கள்.! அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

ஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் : விசித்திரமான சில உண்மைகள்…!

nathan