தலைமுடி சிகிச்சை

ஒரே இரவில் மென்மையான தலைமுடியைப் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க…

குளிர்காலம் என்பதால் தலைமுடி அதிகம் வறட்சியடையும். வறட்சியான தலைமுடி மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே பலரும் தலைக்கு குளித்த பின் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கண்டிஷனர்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதைப் பயன்படுத்த பலரும் அஞ்சுவார்கள்.

ஆனால் இயற்கை வழிகளின் மூலம் தலைமுடியின் மென்மைத்தன்மையை அதிகரிக்க நினைத்தால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. மேலும் தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். இங்கு ஒரே இரவில் தலைமுடியின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும் ஹேர் மாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து தான் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்: தேங்காய் பால் – 1 கப் அர்கன் ஆயில் – சில டேபிள் ஸ்பூன்

ஸ்டெப் #1 முதலில் ஒரு பௌலில் தேங்காய் பால் மற்றும் அர்கன் ஆயிலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின் இரவில் படுக்கும் முன், அதை தலைமுடியில் நன்கு படும்படி, முடியின் முனை வரை தடவ வேண்டும்.

ஸ்டெப் #3 பின் ஷவர் கேப் கொண்டு தலையை கவர் செய்ய வேண்டும். வேண்டுமானால் 1 மணிநேரம் கழித்து தலைமுடியை ஷாம்பு பயன்படுத்தி அலசலாம். இல்லாவிட்டால், இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

ஸ்டெப் #4 பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும். இப்படி ஒருமுறை செய்தாலே, முடியின் மென்மைத்தன்மையில் மாற்றத்தைக் காணலாம். இந்த ஹேர் மாஸ்க்கை சுருட்டை முடி கொண்டவர்கள், வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ளலாம்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

nathan

நிரந்தரமாக பொடுகை போக்க வேண்டுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பா மாறணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

உங்களுக்கு மொட்டை மண்டையில கூட கிடு கிடுனு முடி வளர வைக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தலை முடி மெல்லியதாகவும் சோர்வானதாகவும் இருப்பதற்கு பல காரணங்கள்….

nathan

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு

nathan

கூந்தலின் நிறம்

nathan

எப்படி பயன்படுத்துவது.?! பொடுகைப் போக்கும் எலுமிச்சை..!

nathan

உச்சந்தலையில் அதிகம் சேரும் அழுக்கை வெளியேற்றணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan