30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
தலைமுடி சிகிச்சை

ஒரே இரவில் மென்மையான தலைமுடியைப் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க…

குளிர்காலம் என்பதால் தலைமுடி அதிகம் வறட்சியடையும். வறட்சியான தலைமுடி மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே பலரும் தலைக்கு குளித்த பின் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கண்டிஷனர்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதைப் பயன்படுத்த பலரும் அஞ்சுவார்கள்.

ஆனால் இயற்கை வழிகளின் மூலம் தலைமுடியின் மென்மைத்தன்மையை அதிகரிக்க நினைத்தால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. மேலும் தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். இங்கு ஒரே இரவில் தலைமுடியின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும் ஹேர் மாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து தான் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்: தேங்காய் பால் – 1 கப் அர்கன் ஆயில் – சில டேபிள் ஸ்பூன்

ஸ்டெப் #1 முதலில் ஒரு பௌலில் தேங்காய் பால் மற்றும் அர்கன் ஆயிலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின் இரவில் படுக்கும் முன், அதை தலைமுடியில் நன்கு படும்படி, முடியின் முனை வரை தடவ வேண்டும்.

ஸ்டெப் #3 பின் ஷவர் கேப் கொண்டு தலையை கவர் செய்ய வேண்டும். வேண்டுமானால் 1 மணிநேரம் கழித்து தலைமுடியை ஷாம்பு பயன்படுத்தி அலசலாம். இல்லாவிட்டால், இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

ஸ்டெப் #4 பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும். இப்படி ஒருமுறை செய்தாலே, முடியின் மென்மைத்தன்மையில் மாற்றத்தைக் காணலாம். இந்த ஹேர் மாஸ்க்கை சுருட்டை முடி கொண்டவர்கள், வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ளலாம்.

Related posts

தலையில் உண்டாகும் கொப்புளங்களுக்கு தீர்வு !!

nathan

முடி உதிர்வை தடுக்க முட்டையை கொண்டு கூந்தலுக்கு மசாஜ் செய்யுங்கள்.

nathan

உங்களுக்கு நுனியில முடி வெடிச்சிக்கிட்டெ இருக்கே? அப்ப இத படிங்க!

nathan

முடி உதிர்வை முற்றிலும் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்

nathan

எல்லாவித கூந்தல் பிரச்சனைகளை விடுவிக்கும் ஒரே ஒரு அழகுக் குறிப்பு

nathan

உங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பா மாறணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முடி உதிர்தலை தடுக்க விளக்கெண்ணெய்

nathan

உங்களுக்கு தெரியுமா சொட்டை விழறதுக்கு வேற எதுவுமே காரணமில்ல….

nathan

உங்களது கூந்தல் அதிகமாக கொட்டுகின்றதா

nathan