30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு ஆலு பூரி செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 2 கப்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு – 2
ரவை – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

* மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த ரவையுடன் கேழ்வரகு மாவு, மசித்த உருளைக்கிழங்கு, எண்ணெய் 1 ஸ்பூன், அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* பிசைந்த மாவை பூரியாக உருட்டி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள பூரி மாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சத்தான மாலைநேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி ரெடி.

Related posts

சுவையான சாப்பிடுவதற்கு ஏற்ற மிளகாய் பஜ்ஜி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் கட்லெட்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

nathan

மொறுமொறுப்பான… இட்லி மாவு போண்டா

nathan

சத்தான மிளகு அடை

nathan

சத்தான திணை கார பொங்கல்

nathan

சுவையான தட்டு வடை

nathan

கோதுமை ரவை வெஜிடபிள் புட்டு

nathan

மழைக்காலத்தில் வீணாகிய சாதத்தில் சுவையான வடை செய்வது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

nathan