​பொதுவானவை

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்
தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1 கப்
தண்ணீர் – 3 + 1 கப்
உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

* 1 கப் தண்ணீரில் கேழ்வரகு மாவை கட்டியில்லாமல் கரைக்கவும்.

* அடுப்பின் தணலை குறைத்து கரைத்த கேழ்வரகு மாவை கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கட்டிதட்டாமல் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.

* நன்கு கெட்டியாக வந்தபின் இறக்கவும்.

* சூப்பரான கேழ்வரகு கூழ் ரெடி.

* ஆறியபின் தயிர் கலந்து மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

* வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான உணவும் கூட.201704051258176298 kozhl. L styvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button