30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
​பொதுவானவை

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்
தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1 கப்
தண்ணீர் – 3 + 1 கப்
உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

* 1 கப் தண்ணீரில் கேழ்வரகு மாவை கட்டியில்லாமல் கரைக்கவும்.

* அடுப்பின் தணலை குறைத்து கரைத்த கேழ்வரகு மாவை கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கட்டிதட்டாமல் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.

* நன்கு கெட்டியாக வந்தபின் இறக்கவும்.

* சூப்பரான கேழ்வரகு கூழ் ரெடி.

* ஆறியபின் தயிர் கலந்து மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

* வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான உணவும் கூட.

Related posts

பெண்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க வழிகள்

nathan

கண்டந்திப்பிலி ரசம்

nathan

சூப்பரான மசாலா தால்

nathan

கம்பு வெஜிடபிள் கஞ்சி

nathan

உங்கள் காதல் உண்மையானதா என்பதை அறிய வேண்டுமா?

nathan

பெண்கள் வெறுக்கும் ஆண்களின் சில செயல்கள்

nathan

பெண் குழந்தைகளுக்கு தொடுதலை பற்றி சொல்லி கொடுங்க

nathan

சத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்

nathan

மோர் ரசம்

nathan