25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
nellikai
ஆரோக்கிய உணவு

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

இரும்பு சத்து அதிகம் கொண்ட நெல்லிக்காயை, ஏழைகளின் ஆப்பிள் என அழைப்பர். இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.
ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வை தரவல்லது நெல்லிக்கனி.

நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது. அக உடலை மட்டுமல்ல, கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவோடு, பளபளவென அழகாக இருக்கும். உடலில் உள்ள, டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றிவிடுகிறது.
பொலிவிழந்த முடி போதிய கூந்தல் பராமரிப்பு இல்லாததாலும், அதிக மாசுபாடு காரணமாகவும், கூந்தலானது பொலிவிழந்துவிடுகிறது. எனவே இதனை சரிசெய்யவும், கூந்தலை வலுவாக்கவும், நெல்லிக்காயை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். நெல்லிக்காய் ஒரு இயற்கையான ஹேர் கண்டிஷனர். இதை தலைக்கு போட்டுக் குளித்தால், தலைக்கு, கண்டிஷனர் போட்டது போன்று இருக்கும்.
தினமும் நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு, தலைக்கு 45 நிமிடம் மசாஜ் செய்து, பின் தலைக்கு குளித்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். நெல்லிக்காய் பொடியை, சீகைக்காய் பொடி மற்றும் ஹென்னாவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்து வந்தால், கூந்தல் அடர்த்தியாகும். மேலும், நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தினாலும், கூந்தல் அடர்த்தியாகும்.
பொடுகுத் தொல்லையைப் போக்குவதற்கு நெல்லிக்காய் அருமருந்து. இதை தொடர்ந்து பயன்படுத்தினால், தலை நன்கு சுத்தமாகவும் பொடுகின்றியும் இருக்கும். மன அழுத்தம், செரிமானப் பிரச்சனை மற்றும் ஆரோக்கியமற்ற டயட் காரணமாக, சிலருக்கு நரைமுடி, இளமையிலேயே வந்துவிடுகிறது. எனவே இதை தடுக்க, தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது நல்லது. நெல்லிக்காய் எண்ணெய் தடவி வந்தால், நரைமுடிக்கு முடிவு கட்டலாம். என்றும் இளமை பொலிவுடன் இருக்கலாம்.
தலையில் அதிகமான அரிப்பு ஏற்பட்டால், நெல்லிக்காய் பொடியுடன், தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின், ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் ஏற்படும் அரிப்புகள் நீங்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கூந்தல் வறட்சி, நிறம் மாறுதல் போன்றவை ஏற்படுகிறது. நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தடவி கூந்தலை பராமரித்தால், இந்த பிரச்னைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இதர மருத்துவ குணங்கள்:
ஆப்பிள் போன்று அனைத்து நன்மைகளையும் கொண்டது நெல்லிக்காய். ஆனால், இதன் விலை மிகவும் குறைவு. சந்தைகளில் எளிதில் கிடைக்கவல்லது. தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால், நோய்கள் தூர விலகிவிடும். நெல்லிக்காய் சாப்பிடுவதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும் என்று தெரிய வந்துள்ளது.
அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் நெல்லிக்காய் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும்.
அதிலும் நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.nellikai

Related posts

இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க… சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்….

nathan

டலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரண மாகி விடும். காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்!!

nathan

மொறுமொறுப்பான மீன் மிளகு வறுவல்!

nathan

ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க……

sangika

கர்ப்ப காலத்தில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிறந்த சிகிச்சை

nathan

வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது அருகம்புல்

nathan

சுவையான முருங்கைக்காய் மசாலா

nathan

சுவையான சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி இட்லி

nathan

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பச்சை மிளகாய்

nathan