30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

காலையில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சாமை காரப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி மாவு – 500 கிராம்,
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி,
கடுகு – சிறிதளவு,
உளுந்து – ஒரு தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
சீரகம் – ஒரு தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
தக்காளி – 1,
சின்ன வெங்காயம் – 250 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, 10 நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

* கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

* பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.

பலன்கள்:

நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.

Related posts

சேமியா - கேரட் - பிரெட் ரோல்

nathan

மாங்காய் – இஞ்சி ஊறுகாய்

nathan

தேங்காய்ப்பால் காலிஃப்ளவர் சப்ஜி

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

nathan

வெங்காயம் தக்காளி தொக்கு

nathan

மசாலா முந்திரி வேர்க்கடலை காராபூந்தி

nathan

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோசை

nathan

பிரெட் மசாலா

nathan