28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ht444900
மருத்துவ குறிப்பு

குறட்டையைத் தடுக்க நவீன கருவி

செய்திகள் வாசிப்பது டாக்டர்

குறட்டையைத் தடுக்கும் நவீன கருவி ஒன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாங்கப்பட்டுள்ளது. ரூபாய் 12 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கும் இந்த கருவி, டென்மார்க்கில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது.Cold ablation என்ற பெயர் கொண்ட இந்த கருவி செயல்படும் விதம் பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.’ஒருவருக்கு மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது. இதனால்தான் மூச்சுக்காற்று அடைப்பு ஏற்பட்டு அவர்களது வாய் வழியாக சப்தம் வெளியேறுகிறது. இதையே குறட்டை என்கிறோம். இதுபோன்ற குறட்டையில் வெளியேறும் சப்தத்தின் அளவு 5 புள்ளி முதல் 10 புள்ளி வரை இருக்கலாம்.

இந்த அளவுக்கு மேல் சென்றால், அது சிக்கலானது. இதுபோல் அளவுகடந்த குறட்டையினால் தூக்கம் மட்டும் கெடுவதில்லை. ரத்த அழுத்தம் அதிகமாவது, சர்க்கரை நோய் ஏற்படுவது, மாரடைப்பு தாக்கும் அபாயம் போன்றவையும் ஏற்படுகிறது.அதனால் குறட்டையை சாதாரண பிரச்னையாக நினைக்காமல் உடனே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்’ என்று விளக்கமளித்த மருத்துவர்கள், இந்த கருவியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதன்மூலம் குறட்டைவிடுவது சில நோயாளிகளுக்கு நின்றுபோனதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
ht444900

Related posts

பெண்கள் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

nathan

வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும் வெண்டைக்காய்

nathan

புற்றுநோய் இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் 30 நாட்களில் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன தெரியுமா?படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…நுரையீரலில் தங்கியிருக்கும் நாள்பட்ட சளியை வெளியேற்றணுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பாட்டில் பால் கொடுப்பதால் உண்டாகும் தீமைகள்!

nathan

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரும் மார்பக வலிகள்

nathan

தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு

nathan

உங்களுக்கு அல்சல் இருக்கா? கவலையே வேண்டாம்- இதோ எளிய நிவாரணம்!

nathan