30.3 C
Chennai
Thursday, Jun 26, 2025
201612211353072018 women will reduce the periods of maternity SECVPF
மருத்துவ குறிப்பு

வயது அடிப்படையில் பெண்களுக்கு குழந்தைப்பேறு குறையும் காலகட்டங்கள்

முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் படிப்படியாக குறையத் தொடங்கும்.

வயது அடிப்படையில் பெண்களுக்கு குழந்தைப்பேறு குறையும் காலகட்டங்கள்
இன்றைய கால கட்டத்தில் அனைவரும் இயந்திரங்களாக தான் வாழ்ந்து வருகிறோம். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்வின் முக்கியமான தருணம் குழந்தைப் பேறு. இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைப் பேறு அவ்வாறு கிடையாது.

குழந்தை பேறை தள்ளிப்போடக்கூடாது. இளம் தலைமுறையினர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் குழந்தை பெற்று கொள்வதை சுமை என்று கருதி அதை தள்ளி போடுகின்றனர். ஏனெனில் வயது ஏற ஏற குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைந்து கொண்டே வரும். அதை நினைவில் வைத்து இன்றைய இளம் தலைமுறையினர் அந்தந்த காலகட்டத்தில் குழந்தை பெற்று கொள்ளுங்கள். இருபது வயது ஆரம்பத்தில் ஒரு பெண்ணிற்கு பத்து லட்சத்தில் இருந்து இருபது இலட்சம் வரை முட்டைகள் கருவில் உருவாகின்றன. இதில், ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சம் முட்டைகள் கருத்தரிக்க நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

அதேப்போல தான் ஆணிற்கும் விந்தில் அதிக சக்தியும், வேகமும் இருக்கும். இவை தான் கருத்தரிக்க உதவும். இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும் 1௦௦ சதவீதம் குழந்தைப்பேறுக்கான உடல் மட்டும் மன தகுதியோடு இருகின்றனர். கருத்தரிக்க இந்த வயது தான் ஏற்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருபதுகளின் கடைசிகளில் பெண்களுக்கு கருத்தரிக்க வேண்டிய உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆயினும் கருத்தரிக்க 75 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை என்பதே ஆகும்.

முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் படிப்படியாக குறையத் தொடங்கும். இது தான் பெண்களுக்கு முப்பது வயதுகளில் குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முப்பதுகளின் கடைசி தருணங்களிலேயே குரோமோசோம் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்லாது, ஆணின் விந்தணுவின் வேகமும் குறைந்துவிடும். இதனால், கிட்டத்தட்ட குழந்தைப் பேறுக்கான 5௦ சதவீத வாய்ப்பு இருக்கும் என்பதே மிகவும் சிரமம் தான்.

இயல்பாகவே நாற்பதில் இருந்து நாற்பத்தி ஐந்து வயதிற்குள் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும் வலிமை குறைவாக தான் இருக்கும். அதே சமயம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைவாக தான் இருக்கும். இதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு பெறுவது என்பது மிகவும் சிரமம் தான்.

மிக சில பெண்களுக்கு மட்டுமே இந்த வயதில் குழந்தைப்பேறு அடைய வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும் கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மற்றும் ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். இந்த தருவாயில் குழந்தைப்பேறு அடைவது மிக மிக குறைகிறது.
201612211353072018 women will reduce the periods of maternity SECVPF

Related posts

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்?

nathan

பிறந்த பச்சிளம் குழந்தைகள் பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா நெஞ்செரிச்சலுக்கு முக்கிய காரணம்

nathan

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அசாதாரண அறிகுறிகள்!

nathan

வெளியுலகம் அறியாமலேயே நடந்தப்படும் குழந்தை திருமணங்கள்

nathan

நெஞ்சு சளியால் அவஸ்தையா? அப்ப இத படிங்க!

nathan

இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்

nathan

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எளிய ஆயுர்வேத குறிப்புகள்!

nathan