31.1 C
Chennai
Monday, May 20, 2024
201610110719095651 Will increase the masculinity of young women SECVPF
மருத்துவ குறிப்பு

இளம் பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்மைத் தன்மை

சமீப காலமாக 20 முதல் 25 வயதில் இருக்கும் பெண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகரித்து வருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

இளம் பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்மைத் தன்மை
சமீப காலமாக இளம் பெண்களிடம் ஆண்மைத் தன்மை அதிகரித்து வருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் 20 முதல் 25 வயதில் இருக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை மிக அதிகமாக இருக்கிறதாம். முகம், கை, கால்கள் மட்டுமல்லாது, உடல் முழுவதும் முடி வளர்வது, ஆண்கள் போல் உடல் பெருத்து, தடித்து, கருத்து, சருமம், பரு, வழுக்கை என்று ஏராளமான ஆண்தன்மை தலை காட்டுகிறது.

இவற்றை மறைப்பதற்காக அழகு சிகிச்சை நிலையங்களின் உதவியை நாடுகிறார்கள் பெண்கள். அங்கு இதற்கான சிகிச்சை இல்லை என்பதே உண்மை. இந்த ஆண் தன்மைக்கு ‘பிசிஓடி’ என்ற சினைப்பை நீர்க்கட்டிகள்தான் காரணம் என்கிறது மருத்துவத்துறை. இதுதான் பெண்களின் முகத்தில் மீசை முளைக்கச் செய்வதில் இருந்து மலட்டுத்தன்மை வரை பல பிரச்சினைகளுக்கு காரணம். குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்களில் பாதிப் பேருக்கு இந்த பிரச்சினை இருக்கிறது.

ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் எப்.எஸ்.ஹெச். என்கிற பெண்மைக்கான ஹார்மோனும், எல்.ஹெச். என்கிற ஆண்மைக்கான ஹார்மோனும் இருக்கும். இது சாதாரணமாக 2:1 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது பெண் தன்மை இரண்டு பங்கும், ஆண் தன்மை ஒரு பங்கும் இருக்கும். அதுவே சினைப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு பெண்மைக்கு காரணமான எப்.எஸ்.ஹெச்.ஹார்மோன் குறைவாகவும், எல்.ஹெச். என்ற ஹார்மோன் அதிகமாகவும் சுரக்கத் தொடங்கும்.

இந்த மாற்றத்தின் விளைவாக பெண்களின் முகத்திலும், புருவங்களிலும், மார்பகங்கள் மீதும் அடர்த்தியான முடி வளரும். முடி வளர வேண்டிய தலைப்பகுதியில் வழுக்கை விழும். இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகும். இதனால் வளர்சிதை மாற்றங்கள் உண்டாகும். ஆண்கள் போல் உடல் எடை அதிகமாகும். அக்குள் மற்றும் கழுத்துப் பகுதி கருத்து, பருக்கள், கரும்புள்ளிகள் வரும். இந்த மாற்றம் அதிகமானால் சில பெண்களுக்கு குரல்கூட ஆண்களைப்போல் மாறக்கூடும்.

மேலும் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதி பாதிப்பதால் சினைமுட்டை வளர்ச்சி சரியில்லாமல் போகும். மாதவிலக்கு தள்ளிப்போகும், கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். மீறி கரு உருவானாலும் குழந்தையின் முழுவளர்ச்சி பாதிக்கப்படும். குறைப்பிரசவம் ஏற்படும் என்று எச்சரிக்கிறது, மருத்துவத்துறை.

இந்த சினைப்பை நீர்க்கட்டிகள் வர உடற்பருமனும் வாழ்க்கை முறை மாற்றமும் மிக முக்கிய காரணம். மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை மாறுவதால் நீர்க்கட்டிகள் தோன்றலாம். மாதவிலக்கு சுழற்சி சரியில்லாத பெண்களுக்கும், மன உளைச்சலுக்கு ஆளான பெண்களுக்கும் இது வருவதற்கான வாய்ப்பு அதிகம். மருத்துவர்களிடம் சென்று முறையான ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டால் 90 சதவீதம் குணமாக்கிவிடலாம் என்பது ஆறுதலான செய்தி. 201610110719095651 Will increase the masculinity of young women SECVPF

Related posts

பசியின்மையைப் போக்க பல வழிகள்

nathan

இந்த கலவையை தேமல் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் தேமல் மறைந்துவிடும்!..

sangika

உங்களுக்கு தெரியுமா நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவரை தாக்கும் நோய்

nathan

உங்களுக்கு தெரியுமா தோல் நோய்கள், நாள்பட்ட புண்களை ஆற்றும் தேள்கொடுக்கு இலையின் நன்மைகள் !

nathan

இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் உங்களுக்கு வரவே வராது தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஒருவருக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை எளிய இரத்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம் ?

nathan

கருத்தரிப்பு மற்றும் கருவுறுதல் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா செவி திறனை பாதிக்கும் இரைச்சல்

nathan