மருத்துவ குறிப்பு

பெண்களின் சில செயல்கள் ஆண்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கும்

பொதுவான சில காரியங்கள் மற்றும் சில தருணங்களில் கூட ஆண்களுக்கு உணர்ச்சி நிலை மேலோங்க வாய்ப்புகள் உண்டு.

பெண்களின் சில செயல்கள் ஆண்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கும்
உடலுறவில் ஈடுபடுதல், கொஞ்சி குலாவுதல் தான் உணர்ச்சி நிலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும். ஆனால், இதை தவிர்த்து, பொதுவான சில காரியங்கள் மற்றும் சில தருணங்களில் கூட ஆண்களுக்கு உணர்ச்சி நிலை மேலோங்க வாய்ப்புகள் உண்டு. அவை என்னென்று பார்க்கலாம்.

மற்ற வண்ணங்களை விட சிவப்பு நிற உடை ஆண்களின் உணர்சிகளை தூண்டுகிறதாம். சிவப்பு நிறம் இயற்கையாகவே ஆண், பெண் மத்தியில் உணர்ச்சிகளை தூண்டும் தன்மை கொண்டுள்ளது என ஆய்வுகள் மூலமாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

அடர்த்தியான தன்மை கொண்ட வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்கள் அருகில் வருகையில், அதை சுவாசிக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி மேலோங்குகிறது.

சில ஆண்களுக்கு கண்ணாடியில் தங்கள் உடலையே பார்த்து ரசிக்கும் போது உணர்ச்சி அதிகரிக்கிறது.

தனது துணை, தன் முதுகை தேய்த்து குளிப்பாட்டும் போதுமட்டுமல்ல, அரிக்கும் போது முதுகை சொறிந்துவிட்டால் கூட ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்குமாம்.

துவைத்த சுத்தமான படுக்கை விரிப்புகள் கொண்ட படுக்கையில் படுக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி அலை சுனாமி போல பொங்குகிறது. அந்த நேரத்தில் மனைவி அருகில் இருந்தால் சொல்லவே வேண்டாம்.

மனைவி, வீட்டில் தங்களது உடையை உடுத்தி வேலை செய்கையில் ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்கிறது. இதை பற்றி நசுக்காக தெரிந்து தான் பெண்கள் கணவரின் உடையை அணிந்து கணவரின் உணர்ச்சியை தூண்டி விடுகின்றனர்.

காலை எழுந்தவுடன், துணை முத்தமிட்டு நாளை துவக்கும் போது ஆண்கள் அந்த நாள் முழுவதுமே உணர்ச்சி நிலை மோலோங்கி தான் காணப்படுவார்களாம். தன் துணை மகிழ்ச்சித்து, சிரிக்க சிரிக்க பேசும் தருணங்களில் ஆணுக்கு உணர்ச்சி அலைகள் மேலோங்குகிறது. அதுவும் மனைவி தன்னை தொட்டு தொட்டு பேசி சிரிக்கும் போது கணவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது.wife Some activities will increase husband feelings

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button