Other News

சிறுவன் வெறிச்செயல் – கணவன், மனைவி சுட்டுக்கொலை…

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள தக்ரோகி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (வயது 62). இவரது மனைவி சரோஜ். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ராஜேந்திர சிங் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும், அவரது மகனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர சிங்குக்கும் அவரது சகோதரிக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர சிங் சகோதரியின் மகனான சிறுவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேந்திர சிங், அவரது மனைவி மற்றும் மகன் 3 பேரையும் சரமாரியாக சுட்டான்.

 

இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உறவுக்காரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

மனைவியுடன் நடந்து சென்ற போது புதுமாப்பிள்ளைக்கு உயிரிழந்த சோகம்!!

nathan

காதலிக்காக ரூ.659 கோடியில் மாளிகை – அசத்திய அமேசான் நிறுவனர்!

nathan

மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சமுத்திரக்கனி

nathan

கவுண்டமணியுடன் நடித்துள்ள சிறகடிக்க சீரியல் நடிகர்

nathan

. தலையில் சிலிண்டரை வைத்து கரகம் ஆடும் பெண்.. வைரல் வீடியோ!!

nathan

ராமர் கோயில் திறப்பு குறித்து பேசிய பா.ரஞ்சித்

nathan

இமயமலையில் இருந்து ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியானது

nathan

நடிகை வனிதாவின் மகன் விஜய் ஹரியா

nathan

கோவில் பிரசாதத்தை திருடியதாக குற்றம்சாட்டி இளைஞர் அடித்துக்கொலை

nathan