BXC8c47L0v
Other News

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

கம்பஹாவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிதிபெல பொலிஸார் தெரிவித்தனர். ஊராபொர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குழந்தையின் தாயான கே.ஏ.சஞ்சீவனியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

இவரது கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், விசாரணையில் அந்த பெண் தனது கணவரின் தாய், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் கணவரின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது.

 

 

வீட்டின் வரவேற்பறையின் நடுப்பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்ட மாமியார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தாயாருக்கு அறிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். பூகொட உப நீதவான் கமல் சமந்தபெரும சம்பவ இடத்திற்குச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

 

 

சடலத்தை படுபிட்டிபர வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரரை காணவில்லை எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

கை, கால் மற்றும் வாய் நோய்: உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan

இலங்கையில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்கு தாயாக மாறிய குரங்கு

nathan

திருமணத்திற்கு பின் எலும்பும் தோலுமான நடிகை.. கவலையில் ரசிகர்கள்..

nathan

இரண்டாவது திருமணமா? விரைவில் அம்மாவாகும் சமந்தா

nathan

செல்ல பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அர்ஜுன்

nathan

வீட்டை விட்டு வெளியேறிய கூல் சுரேஷ்-பிரதீப் சொன்ன தகாத வார்த்தை…

nathan

திடீர் மொட்டை ஏன்? – விளாசல் பதில் கொடுத்த காயத்ரி ரகுராம்!

nathan

தனி ஒருவன் 2 அரவிந்த்சாமி கதாபாத்திரத்தின் வில்லனே ஒரு பிரபல ஹீரோ தான்

nathan

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்திய தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி!

nathan