28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
BXC8c47L0v
Other News

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

கம்பஹாவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிதிபெல பொலிஸார் தெரிவித்தனர். ஊராபொர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குழந்தையின் தாயான கே.ஏ.சஞ்சீவனியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

இவரது கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், விசாரணையில் அந்த பெண் தனது கணவரின் தாய், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் கணவரின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது.

 

 

வீட்டின் வரவேற்பறையின் நடுப்பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்ட மாமியார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தாயாருக்கு அறிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். பூகொட உப நீதவான் கமல் சமந்தபெரும சம்பவ இடத்திற்குச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

 

 

சடலத்தை படுபிட்டிபர வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரரை காணவில்லை எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

பிக் பாஸ் ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

nathan

சிக்கிய ஜோவிகாவின் காணொளி… இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா?

nathan

விஜய் வசந்த் திருமண புகைப்படங்கள்

nathan

அடேங்கப்பா! இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா ..!

nathan

இரும்புச்சத்து குறைபாடு : உங்கள் இரும்பு உட்கொள்ளலை அதிகரிக்க சிறந்த உணவுகள்

nathan

ஐஸ்கிரீமில் கைவிரல்! ஆசையோடு சாப்பிட்ட டாக்டருக்கு அதிர்ச்சி

nathan

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள்.. விரட்டியடித்த வீரப்பெண்

nathan

மீண்டும் தங்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா? – முதலில் வீசும் போது நடந்தது என்ன?

nathan

Heroine-களையே ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

nathan