35.5 C
Chennai
Sunday, Jun 21, 2026
Other News

கனடாவில் கைதான இலங்கை தமிழர்: அதிர்ச்சி தகவல்

கனடாவின் ஒன்ராறியோவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான புரமுரன் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிராம்லானில் உள்ள Bovaird Drive மற்றும் Mountash ஆகிய இடங்களில் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபரான அனுஷன் ஜெயக்குமார், சிறுமி நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை அணுகி, தன்னை பொலிஸ் அதிகாரி எனக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

சந்தேக நபரின் நிழற்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர், மேலும் சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர் மீது பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தல், வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts

ரீ என்ட்ரி கொடுத்த நமீதா..

nathan

ஜூலை மாத ராசி பலன்

nathan

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் புகைப்படங்கள்

nathan

மாலத்தீவில் நீச்சல் உடையில் கணவருடன் ரொமான்ஸ்..!

nathan

கும்பத்தில் சனியின் ஆட்டம்.. சாதகமான பலன்களைப் பெற்றாலும், சிலருக்கு சில கவலை

nathan

இந்தியாவின் அடுத்த பிரமாண்ட திருமணம் – அம்பானி குடும்பத்தை மிஞ்சுமா?

nathan

நயன்தாராவாக மாறிய இலங்கை பெண்

nathan

233-வது படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக கமல்..?

nathan

என் தங்கச்சி ஓரினச்சேர்க்கையாளரா..? – பிக்பாஸ் மாயா-வின் அக்கா பதில்..!

nathan