27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
suddu1
Other News

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவர் : மாரடைப்பால் மரணம்!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்வா பகுதியில் திலீப் சால்வி வசித்து வருகிறார். அவருக்கு வயது 56, இவரது மனைவி பிரமிளாவுக்கு 51 வயது. திலீப் சால்வே தானே மாவட்ட முன்னாள் மேயர் கணேஷ் சால்வேவின் தம்பி ஆவார்.

நேற்று இரவு 10 மணியளவில் திலீப் சால்வே வீடு திரும்பினார். பின்னர் திலீப்புக்கும், அவரது மனைவி பிரமிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய திலீப் தனது மனைவி பிரமிளாவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார்.

இதில், சம்பவ இடத்திலேயே பிரமிளா மயங்கி விழுந்தார். மனைவியை சுட்டுக் கொன்ற சில நிமிடங்களில் திலீப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால், திலீப்பும் நிலைகுலைந்து விழுந்தார், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவரது மகன், ரத்த வெள்ளத்தில் தாயும், தந்தையும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திலீப் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியை சுட்டுக்கொன்ற கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சுப்ரமணியபுரம் சுவாதி..

nathan

கன்னி ராசிக்கு பெயர்ச்சியான கேது.. பலன்கள்

nathan

173 வகை உணவுகள்! மருமகனுக்கு பரிமாறி அசத்திய மாமியார் – வைரலாகி வருகிறது

nathan

நடிகர் யோகிபாபுவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

அண்ணன் வீட்டிற்கு வந்து வாழ்த்துக்களை பெற்ற நடிகர் ரஜினிகாந்த்

nathan

கைபேசியை பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி..கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்!!

nathan

கணவர் கிரிஷுடன் விவகாரத்து..?

nathan

வீட்டில் ஊறுகாய் பாட்டில் நிறைய இருந்தா பணம் கொட்டுமாம்…

nathan

கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நன்மைகள்

nathan