மாமனாருடன் தனிமையில் இருக்க வற்புறுத்திய கணவர் உட்பட 5 பேர் மீது பெண் என்ஜீனியர் ஒருவர் வழக்கு பதிவு செய்து அதிரடி காட்டியுள்ளார்.
பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் வசித்து வரும் 29 வயது இளம்பெண், அங்குள்ள சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கும், தீபக் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த தீபக், அவரது தந்தை கெம்பனராசிமய்யா, தீபக்கின் சகோதரர் ரக்ஷக், சகோதரி அனிதா, தீபக்கின் அத்தை ஹேமா ஆகியோர் அந்த பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு வற்புறுத்திய நிலையில், குறித்த பெண் அதற்கு மறுத்துள்ளார்.
இந்நிலையில் தீபக்கின் தந்தை மருமகள் என்றும் பாராமல் குறித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த நிலையில், இதனை தனது கணவரிடம் கூறியுள்ளார்.
ஆனால் கணவர் இதனை தட்டிக்கேட்காமல், தந்தையுடன் மட்டுமின்றி, தனது சில நண்பர்களுடனும் தனிமையில் இருப்பதற்கு கட்டாயப்படுத்தியதோடு, பெண்ணின் கன்னித்தன்மையையும் சோதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் மனம் வெறுத்த அந்த பெண் கணவர் மற்றும் உறவினர்கள் மீது பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.