Other News

இந்த ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்…

cover 1615031649

நீங்கள் ஒருவருடன் காதல் ரீதியாக ஈடுபடும்போது, ​​முதலில் நீங்கள் கொஞ்சம் உடைமையாக உணர்கிறீர்கள். ஆனால் அது முன்னேறி, உடைமைத்தன்மை அதிகரிக்கும் போது, ​​உங்கள் துணை மிகவும் பாதிக்கப்படுவார்.

இது உங்கள் காதல் வாழ்க்கையை முற்றிலும் சீர்குலைக்கும். சில ராசிக்காரர்கள் காதலில் மிகவும் உடைமையாகவும் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை காதலிக்கும் போது, ​​எல்லாவற்றுக்கும் பயப்படுவீர்கள்.இந்தப் பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் பொஸசிவ் எண்ணம் அவர்களின் பாதுகாப்பை உணர வேண்டிய அவசியத்திலிருந்து வருகிறது. எனவே ஒரு காதல் உறவில் இருக்கும்போது, அவர்கள் மிகவும் சுயநலமாக உணரலாம். இவர்கள் தங்கள் துணையிடமிருந்து முழுமையான விசுவாசத்தையும் உண்மையையும் எதிர்பார்க்கிறார், ஏனெனில் அவர்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அழகாகவும் ஆடம்பரமாகவும் இருக்கும் விஷயங்களை விரும்புகிறார்கள், மற்றவர்களிடம் அதனை கொடுப்பது மட்டுமின்றி அவற்றை தொடக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு சந்தேகத்திற்கிடமான மற்றும் பொறாமை கொண்ட தன்மையைக் கொண்டிருப்பதால் அவர்கள் கைவிடப்படுவோமோ அல்லது துரோகத்திற்கு ஆளாகி விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். பொஸசிவ் எண்ணம் என்பது உணர்ச்சிரீதியான மூச்சுத் திணறல் என்று அவர்கள் உணரலாம், ஆனால் அவர்கள் தங்கள் மீது பரிதாபம் வரவேண்டுமென்பதற்காக அதைச் செய்யவில்லை, மாறாக தங்களின் நலனுக்காக செய்கிறார்கள்.

சிம்மம்

எல்லோரும் தங்களுடையது குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள். அவர்கள் அழகான மனிதர்களையும் விஷயங்களையும் விரும்புகிறார்கள், அவர்களைக் கொண்டிருப்பதற்காக பாராட்டப்பட விரும்புகிறார்கள். அவர்கள் தங்களை அதிகப்படியான பொஸசிவ் எண்ணம் கொண்டவர்கள் என்று நினைப்பதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் வாழ்க்கையில் உள்ளதைப் பாராட்டுவதாக அவர்கள் உணர்கிறார்கள். இவர்கள் எப்போதுமே தங்கள்உடைமைகளைப் பற்றி தற்பெருமை காட்ட விரும்புகிறார்கள், அதற்காக எதையும் செய்வார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு எப்படி ஒட்டிக்கொள்வது என்பது தெரியும், அவர்கள் அக்கறை காட்டுவதால் அதைக் கூறி அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் எண்ணங்கள் நன்றாக இருக்கலாம், ஆனால் அவை இன்னும் தன்னுடையது என்ற சிந்தனை அதிகமாகவே உள்ளவர்கள். அவர்கள் எப்போதும் துணையை கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சில நேரங்களில் அவர்களின் துணையால் சுவாசிக்க கூட முடியாது. தங்கள் துணை எப்போதும் தன்னை விட்டு பிரிய மாட்டார் என்று அவர்கள் நம்ப தொடங்க வேண்டும், அதுவரை அவர்களின் துணை படாதபாடு பட்டே தீரவேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் தங்களிடம் இருப்பவைகளுக்காக கடினமாக போராடுகிறார்கள், எனவே அவர்கள் பொஸசிவாக இருப்பதற்கான உரிமையை சம்பாதிக்கிறார்கள் என்று அவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகள் என அனைத்தையும் காட்ட விரும்புகிறார்கள். அவை விலை உயர்ந்ததாக இருக்காது, ஆனால் அந்த விஷயங்களை நினைத்து அவர்கள் பெருமிதம் கொள்வதாக கூறுவார்கள். சில நேரங்களில், யாராவது ஒருவர் அவர்களின் உடமியில் பங்கு கோரும்போது அவர்களின் பொஸசிவ் எண்ணம் தீவிரமடையும்.

Related posts

அம்மாகூட திட்டுவாங்க..விவாகரத்துக்கு பின் குடிகாரி, வாழாவெட்டி-ன்னு

nathan

பிரின்ஸ் பட தோல்விக்கு பொறுப்பேற்று… நஷ்ட ஈடு வழங்கிய சிவகார்த்திகேயன்

nathan

கிரிக்கெட் வீரர் போதையில் தகாதமுறையில் நடந்தார்…! நடிகை புகார்

nathan

கோவை சரளாவின் சொந்த வீட்டை பார்த்ததுண்டா?

nathan

தளபதி விஜய் கையில் சிரித்தபடி இருக்கும் குழந்தை யார்ன்னு தெரியுமா …

nathan

வலது பக்கம் மார்பகம் இல்லை… நடிகை சிந்து கண்ணீர் பேட்டி

nathan

நடிகை பூர்ணாவின் வளைகாப்பு! புகைப்படங்கள்

nathan

லவ் டுடே இவானா உடன் இருக்கும் இவர் யார்

nathan

பாகிஸ்தானில் 60வது முறையாக தந்தையான மருத்துவருக்கு 4வது திருமணம்!

nathan