அழகு குறிப்புகள்

நடிகை சௌந்தர்யாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் பெண்.! வீடியோ

மறைந்த நடிகை சௌந்தர்யா உரித்து வைத்து இருக்கும் பெண் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இவரது தந்தை பிரபல திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். நடிப்பு மீதான ஆர்வத்தால் மருத்துவப் படிப்பை நிறுத்திவிட்டு திரையுலகில் நுழைந்தார். 1993 ஆம் ஆண்டு பொன்னுமணி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரையுலகில் அறிமுகமானார். செளந்தர்யா பல முக்கிய தமிழ் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அருணாச்சலம் மற்றும் படையப்பா படங்களில் ரஜினிகாந்துடன் இணைந்து புகழ் பெற்றார்.

 

2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சௌந்தர்யாவின் மரணம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்த்த பலருக்கும் அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

 

இந்நிலையில், சௌந்தர்யா உரித்து வைத்து இருப்பது போல வீடியோவை பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சித்ரா என்று பெயரிடப்பட்டுள்ள அவர், மறைந்த சௌந்தர்யாவைப் போல் இருக்கிறார். இவரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவையும் பாருங்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button