32.2 C
Chennai
Monday, May 20, 2024
Beauty tips jpg 1218
சரும பராமரிப்பு

சருமத்திற்கு மென்மை, குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய்

கருவளையம் நீங்க விரைவான, பாதுகாப்பான, எளிய வழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதுதான் வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தை போக்குகின்றன.

வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள் வைத்திருப்பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனைத்து கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப்பது நல்ல பலன் தரும்.

கண்வீங்கி போய் இருந்தால் வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள் வைத்தால் அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும்.

வெள்ளரியை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும்.

சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்வீச்சு, சருமத்தை பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும் சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது.

வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
Beauty%20tips jpg 1218

Related posts

குழந்தையின் சருமம் போல உங்கள் சருமமும் ஆக வேண்டுமா? இத ட்ரைப் பண்ணுங்க…

nathan

சருமத்திற்கான சூப்பர் ஃபேஸ் வாஷ் எப்படி இயற்கை முறையில் தயாரிக்கலாம்?

nathan

வயதான தோற்றத்தை மாற்றியமைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

ஒரே வாரத்தில் தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற ஓர் அற்புத வழி!

nathan

கோடைக் காலத்தில் சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாப்பது எவ்வாறு?

nathan

சரும பிரச்சனைகளைத் தடுக்க வெந்தயத்தைப் பயன்படுத்துவது எப்படி?சூப்பரா பலன் தரும்!!

nathan

அழகுக்கலை வல்லுனர்களால் மட்டுமே சில விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும்

nathan

ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

nathan

முகம் மென்மையாக மாற

nathan