29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
Other News

உங்களுக்கு தெரியுமா இந்த ராசியில பிறந்தவங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்களாம்!!

ஜோதிடம், இராசி பலன் எல்லாம் மூடநம்பிக்கை என்று ஒருபக்கம் நாம் விவாதம் செய்துக் கொண்டிருக்கையில் அமெரிக்கர்கள் ஓர் ஆராய்ச்சியில், ஜோதிடம் என்பது மெய் விஞ்ஞானம் என்று கூறுகின்றனர்.

 

ஆம், இன்று பல போலியான ஆட்கள் பொய் கூறுவதை வைத்து நமது முன்னோர்கள் கூறி சென்ற உண்மைகளை நாம் மூடநம்பிக்கை என சொல்வது தவறு. நட்சத்திரங்களில் நிலையை பொறுத்து பூமியில் மாற்றங்கள் ஏற்படுவதை போல மனித மனதுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர்.

 

அந்த வகையில், பிறக்கும் போதே இந்த குழந்தை இந்த இராசி, நட்சத்திரம் என்று குறிக்கப்பட்டுவிடுகிறது. அந்த இராசி நிலைபாடுகள் எந்த மாதிரியான குணாதசியத்தை வெளிப்படுத்துகின்றது என்று உங்களுக்கு தெரியுமா….

மேஷம்

இவர்கள் காதலில் குதிரையை போல, விழுந்த வேகத்தில் எழுந்து விடுவார்களாம். உடலுறவில் நாட்டம் அதிகமானவர்களாக இருப்பார்களாம். அனைத்து விஷயங்களிலும் வேகம் காட்டினாலும், அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்களாம்.

ரிஷபம்

மிகவும் அமைதியாக, மெதுவாக முடிவெடுக்கும் மனநிலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும், முடியுமா, செய்தால் நன்மை விளையுமா என்று அனைத்தையும் யோசித்து தான் செய்வார்கள்.

மிதுனம்

இயற்கையாகவே நிறைய அறிவாற்றல் கொண்டவராக இருப்பார்களாம். புத்திக் கூர்மை அதிகமாக இருக்குமாம். சரியாக மதிப்பீடு செய்யும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். உறவுகளுக்கு மத்தியில் மிகவும் இனிமையாக நடந்துக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடகம்

இவர்கள் மிகவும் எளிமையாக இருப்பார்களாம், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள். இவர்கள் எதிலும் பாதுகாப்பாக இருக்க நினைப்பார்கள் மற்றும் உணர்சிப்பார்வமான மனப்பாங்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

ஆளுமை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். தலைமை வகிக்க விரும்புவார்கள். வீரம், தைரியம், மேலாண்மை, இறையாண்மை போன்றவற்றில் இவர்கள் மேலோங்கி காணப்படுவார்கள். மற்றவர்களை மதிக்கும் மனப்பாங்கு இவர்களிடம் இருக்கும்.

கன்னி

இவர்கள் வெட்கம் மற்றும் கூச்சம் சுபாவம் கொண்டவர்கள். ஊரோடு ஒத்து வாழாமல், தனிமையிலே இருப்பார்கள். யாருக்காகவும் இவர்களது சுபாவத்தை குணாதசியத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

துலாம்

இவர்கள் எப்போதும் சமநிலையான மனப்பக்குவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவரிடதிலும் சமநிலையை எதிர்பார்பார்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டார்கள். எந்த காரியத்தையும், ஆராய்ந்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்

தைரியமும், ஆதிக்கமும் இவர்களது குணமாக இருக்கும். நேர்பட பேசும் குணம் உடையவர்கள், நேருக்கு நேர் போட்டியிடுவார்கள். சுதந்திரமாக இருப்பார்கள். புத்திக்கூர்மையும், தொலைநோக்கு பார்வையும் அதிகமாக இருக்கும் இவர்களிடம்.

தனுசு

இவர்கள் கடவுள் பாதி, மிருகம் பாதி என்பது போல குணமுடையவர்கள். ஆன்மீகமும், தத்துவங்களும் இவர்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கும். தனித்தன்மை உடையவர்களாக இருப்பார்கள். ஆர்வமும், தைரியமும் அதிகமுள்ள இவர்கள் எதையும் முன்கூட்டியே செய்யும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

மகரம்

எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்கள், கூச்ச சுபாவம் அதிகமாக இருக்கும் இவர்கள், பெரும்பாலும் அனைத்து விஷயங்களையும் இவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். எடுத்த காரியத்தை பொறுமையாகவும், அதே சமயம் நிலையானதாகவும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.

கும்பம்

இறையாண்மையிலும், ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் நம்பிக்கை அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உபதேசம் வழங்குவார்கள். உணர்வுபூர்வமாக செயல்படுவார்கள்.

மீனம்

நல்லது, தீயது இரண்டு பக்கங்களிலும் முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். எதையும் வெளிப்படையாக பேசும் பண்புடையவர்கள். அறிவியல், ஆன்மிகம் இரண்டையும் சார்ந்திருப்பார்கள். எந்த விஷயத்திலும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள், மென்மையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

 

Related posts

மனைவியை மரியாதையாக நடத்தும் ராசிகள்

nathan

மீண்டும் திருமண வைபோகமா? விஜயகுமாரின் மகள் திருமண புகைப்படம்

nathan

இரவில் காதலனை சந்திக்க கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்த இளம்பெண்…

nathan

நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

nathan

கார் ரேஸில் அஜித் அணி வெற்றியும் கொண்டாட்டமும் – புகைப்படத் தொகுப்பு

nathan

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை தமன்னா எப்படி இருக்கிறார் பாருங்க..

nathan

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

nathan

தொப்புளில் மஞ்சள் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

கவர்ச்சிக்கு க்ரீன் சிக்னல் காட்டுகிறாரா பிரியங்கா மோகன்?

nathan