Other News

இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்!!

செவ்வாய் பெயர்ச்சி 2022, ராசிகளில் அதன் தாக்கம்: சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகம் சிவப்பு கிரகமாக கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகவும், வலிமை மற்றும் ஆற்றலின் காரணியாகவும் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒரு நபரின் ஜாதகத்தில் எந்த வீட்டில் செவ்வாய் கிரகம் அமைகிறதோ, அந்த நபரின் மீது செவ்வாயின் தாக்கமும் அந்த ஸ்தானத்திற்கு ஏற்றார்போல் இருக்கும்.

ஜோதிடத்தின் கணக்கீடுகளின்படி, கிரகங்களின் தளபதியான செவ்வாய், அக்டோபர் 16, 2022 அன்று மதியம் 12:4 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மாறி மிதுன ராசியில் நுழைகிறார். மிதுன ராசியில் செவ்வாயின் சஞ்சாரத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சிலருக்கு இந்த மாற்றம் சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். எனினும் செவ்வாயின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நல்ல பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்

மேஷம்:

மேஷ ராசியின் எட்டாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் என்பதால் மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த நேரத்தில், முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் வரும். பண அபிவிருத்திக்கான நேரம் இது. வியாபாரம் செய்வதற்கும் இது ஏற்ற நேரமாக இருக்கும். நீங்கள் புதிய தொழில் செய்ய நினைத்தால், இந்த நேரத்தில் தொடங்குவது சாதகமாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button