மருத்துவ குறிப்பு

மூட்டு வலி நீங்க வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியம் உங்களுக்காக!

பொதுவாக, மூட்டு வலி வயதானவர்களுக்குத்தான் அதிகம்.

இந்த பிரச்சனைகள் எல்லா வயதினருக்கும் ஏற்படுகின்றன மற்றும் பொதுவாக மணிகட்டை, விரல்கள் மற்றும் பாதங்களில் மிகவும் பொதுவானவை.

சில இயற்கை வைத்தியங்கள் மூலம் இதை முதலில் சரிசெய்யலாம்.

தேவையானவை
பூண்டு – 15
கடுகு எண்ணெய் – 6 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
செய்முறை
15 பூண்டு பற்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 5 அல்லது ஆறு ஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பின்பு எண்ணெய் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பூண்டு கருகும் வரை நன்றாக கிளறிவிட்டு, பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். எண்ணெய் சூடாறியதும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் நன்கு ஊறவைத்து கொள்ளவும். வெந்தயம் நன்கு ஊறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்கு மை போல் அரைத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அரைத்து வைத்துள்ள வெந்தயம் பேஸ்ட்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிடுங்கள், கலவையானது நன்கு பேஸ்ட்டு போல் வரும் அந்த சமயம் இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெயை ஊற்றி, திரும்பவும் ஒருமுறை நன்றாக கிளறி விடுங்கள். அவ்வளவு தான் வெந்தயம் பேஸ்ட் தயார்… இப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலில் வெந்தயம் பேஸ்ட்டினை மிதமான சூட்டில் மூட்டு வலி ஏற்படும் இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்பு 15 நிமிடம் கழித்து கழுவவேண்டும்.

அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள பூண்டு தைலத்தை மூட்டு பகுதியில் தடவ வேண்டும். இந்த முறையை தினமும் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button