27.7 C
Chennai
Wednesday, Aug 20, 2025
e520dcaa a4c2 4aa8 9849 ee6edc399fe2 S secvpf
மருத்துவ குறிப்பு

மரு, கட்டியை குணப்படுத்தும் இரணகள்ளி

தாவாரப்பெயர் -: Kalanchoe pinnata

* இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றில் இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்த பின்னர், தேள் கொட்டின கடிவாயில் மேல்படி இலையை அரைத்து வைத்துக் கட்டி விட தேள்கடி நஞ்சு இறங்கப் போகும்.

* இரணக்கள்ளி இலைக்கு இரணத்தை ஆற்றும் சக்தியுண்டு. இந்த இலையை மை போல் அரைத்து, அறாத இரணத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக இரணம் ஆறும்.

* இரணகள்ளிச் சாற்றை மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொற சொறப்பான மருக்கள் பேரில் இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி, பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வர வேண்டும்.

* இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அரைக் கிலோ பசு வெண்ணையுடன் 500 மில்லி சாறு சேர்த்து நெய் காய்ச்சி எடுதுக்கொண்டு, அந்த நெய்யை பிரண்டைத் துவையல் சோற்றுடன் கலந்து அதில் மேல்படி நெய்யை உருக்கி ஊற்றிப் பிசைந்து பகல் உணவில் மட்டும் சாப்பிட்டுவர குன்ம நோய், அசீரணம், வயிற்றில் ரணம், வாயுத்தொல்லை, மற்றும் சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல் ஆகியவைகளில் காணும் எல்லாவித புண், ரணம், அழிற்சி யாவும் ஆறிப்போகும்.
e520dcaa a4c2 4aa8 9849 ee6edc399fe2 S secvpf

Related posts

இறந்த தாயின் வயிற்றிலிருந்து 123 நாட்கள் கழித்து உயிருடன் பிறந்த ட்வின்ஸ்!

nathan

தோல் நோய் குணமாக…

nathan

காலையில் எழுந்ததுமே சோர்வா இருக்கா..?

nathan

தெரிஞ்சிக்கங்க… வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சில சூப்பரான கை வைத்தியங்கள்!!!

nathan

அவசியம் படிக்க..பச்சிளம் குழந்தைக்கு வரும் சரும அலர்ஜி

nathan

விலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

nathan

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!12 நாடுகளுக்கு பரவிய குரங்கம்மை நோய்:

nathan

படிக்கத் தவறாதீர்கள்! வாரத்தில் ஒரு நாள் சிறுநீரகக் கற்களை கரைக்க உண்ண வேண்டிய உணவுகள்

nathan

தலைமுடியை வலிமையாக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!

nathan