25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
1 1
ஆரோக்கியம் குறிப்புகள்

பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாகும் நெல்லிக்காயின் பயன்கள்

பெருநெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. இதில் இரும்புச் சத்தும், வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளன.

நெல்லிக்காயை சாதத்துடன் அடிக்கடிச் சேர்த்து வந்தால் நோய் தடுப்பு மருந்தாகச் செயல்பட்டு உடல் நலத்தைக் காக்கும்.

சுத்தமான தேனில் நெல்லிக்காயைப் போட்டு ஊற வைத்துப் பல நாட்கள் கழித்து எடுத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டுப் பாலைக் குடித்தால் வீரிய சக்தி ஏற்பட்டு இளமையை உண்டாக்கும்.

நெல்லியின் இலைக் கொழுந்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வந்து மெழுகாக அரைத்து மோரில் கலந்து குடிக்கக் கொடுத்தால் சீதக்கழிசல் குணமாகும்.

எலும்புருக்கி நோயினால் அவதிப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி நெல்லிச் சாறுடன் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து தினசரி காலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

நெல்லிக் காயைத் துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி, ஒக்காளம், சுவையின்மை போன்ற குறைபாடுகள் குணமாகும்.

Related posts

இந்த ஆரோக்கியமான உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

nathan

வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா சாமந்தி பூவின் மருத்துவக் குணங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட நித்தியகல்யாணி!!

nathan

சாரா அலிகானின் ஆடையின் விலையை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி…!

nathan

உங்களுக்கு தெரியுமா தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா அடிக்கடி சிறுநீர் வர காரணம் இதுதான்..?

nathan

தலைமுடியில் ஏன் எண்ணெய் தடவ வேண்டும்?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா வெட்டிவேரை வீட்டின் கதவுகளிலும், ஜன்னல்களிலும் திரைகளாக காட்டினால் கிடைக்கும் பலன்கள்!

nathan