தலைமுடி சிகிச்சை

இளநரையை தடுக்கும் புளி -சூப்பரா பலன் தரும்!!

இன்றைய தலைமுறையில் நரைமுடி பிரச்சினை என்பது பலருக்கும் உண்டு. நரை முடி உருவாக பல காரணங்கள் உண்டு. ஆனால், நரை முடியை கருமையாக்க பல இராசயனங்கள் பயன்படுத்தப்பட்டாலும், இயற்கையாகவே கருமையாக்குவது தான் சிறந்தது.

இதனால் பக்க விளைவுகளும் ஏற்படாது. அந்த வகையில் வீட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் புளியை வைத்து எப்படி நரைமுடியை கருமையாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

அதன்படி தினமும் உணவில் புளி சேர்த்துக் கொண்டால் இந்த இரண்டு பிரச்சனைகளும் தீரும் என்கின்றனர் நிபுணர்கள். புளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் இதில் உள்ளன.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்த வைட்டமின்கள் முடி மற்றும் உடலின் செல் மீளுருவாக்கம் செய்ய உதவும். முடி பலவீனமாக இருக்கும் போது புளியை ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு சில நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து அதன் சாறை திப்பி இல்லாமல் வடிகட்டவும்.

இளநரையை தடுக்கும் புளி – கருமையாக வைத்துக்கொள்வது எப்படி?

பின்னர், இதை கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் ஷாம்பு கொண்டு கூந்தலை சுத்தம் செய்ய வேண்டும். இறுதியாக உங்கள் தலைமுடியை 15 நிமிடங்களுக்கு ஒரு சூடான துண்டினால், கட்டவும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடி வலுப்படும்.

இளநரையை தடுக்க புளியை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். புளியை உட்கொள்வது சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

புளியைக் கொண்டு ஃபேஸ் பேக்கைத் தடவினால், முகத்தில் உள்ள புள்ளிகள் நீங்கி, அபரிமிதமான பொலிவு வரும். புளியில் கொழுப்பு எதுவும் இல்லை. அதனால், கலோரிகள் உட்கொள்ளும் அளவு அதிகரிக்காது. மேலும் உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button