29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
அழகு குறிப்புகள்

இதைTry பண்ணுங்க..! முகப்பரு, கருவளையம், முகசுருக்கம் இல்லாமல் போக…

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது, அதுவும் அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயன கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். இதற்காக பலர் அழகு நிலையத்திற்கு செல்கின்றனர்.

இருப்பினும் சருமத்தில் தோன்றும் பருக்கள், கருவளையங்கள் (dark circles), முகசுருக்கங்கள், கரும்புள்ளிகள் (dark circles) ஆகியவை நீங்குவதற்கு நாம் அன்றாடப்பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மிகவும் உதவுகிறது.

அட ஆமாங்க நம் சருமத்தில் தோன்றும் சில பிரச்சனைகளை சரி செய்வதற்கு டூத் பேஸ்ட் ஒரு சிறந்த அழகு பராமரிப்பு பொருளாக விளங்குகிறது.

கரும்புள்ளிகளை:
சிலருக்கு சருமத்தில் அதிகளவு கரும்புள்ளிகள் தோன்றும், அவற்றை சரி செய்வதற்கு டூத் பேஸ்ட் ஒரு சிறந்த பொருளாக பயன்படுகிறது.

சருமத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மறைய ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின்பு அந்த கலவை முகத்தில் தடவி ஒரு பேக்காக போடுங்கள் பின்பு 1/2 மணி நேரம் வரை வைத்திருந்து, பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று இரண்டு மாதங்கள் வரை செய்து வர சருமத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

முகப்பருக்களுக்கு மற்றும் கரும்வளையத்திற்கு (dark circles):
பலருக்கு இருக்கின்ற ஒரு தொல்லைதான் இந்த முகப்பரு பிரச்சனை. இவற்றை சரி செய்வதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின்பு இந்த கலவையை சருமத்தில் தடவி சிறிது நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும் பின்பு 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் ஒருமுறை என்று இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து செய்து வர சருமத்தில் தோன்றும் பருக்கள் மறையும். மேலும் கருவளையங்கள் (karuvalayam poga tips) மறையும்.

முகத்தில் தோன்றும் கருத்திட்டுகளுக்கு (dark circles):
சிலருக்கு சருமத்தில் அதிகளவு கருத்திட்டுகள் தோன்றும், அவற்றை சரி செய்ய ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட், சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின்பு அந்த கலவையை சருமத்தில் தடவி 1/2 மணி நேரம் வரை வைத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.

இந்த முறை வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமத்தில் தோன்றும் கருத்திட்டுகள் மறைந்து, சருமம் பொலிவு பெரும். (beauty tips in tamil)

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் நீங்க:
சிலருக்கு முகத்தில் தேவையற்ற இடத்தில் முடிகள் இருக்கும். அந்த முடிகள் உதிர்வதற்கு ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் எடுத்து கொள்ளுங்கள்.

பின்பு அவற்றில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சருமத்தில் தடவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் அனைத்தும் உதிர்ந்து விடும். சருமமும் ஜொலிஜொலிக்கும்.

Related posts

இதை தொடர்ந்து 15 நட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்

nathan

சூப்பர் டிப்ஸ்! மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்

nathan

உங்கள் முகம், மாசு மரு இல்லாத பளிங்கு போல் பிரகாசிக்க இதோ சில சிகிச்சை முறைகள்…

nathan

தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும்

nathan

இவ்வாரு 5 வழிகளிலும் உங்கள் அழகை பராமரித்து வந்தால் உங்கள் வயதை யாராலும் கண்டுபிக்கமுடியாது.

nathan

தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும். இயற்கை குறிப்புகள்…!!

nathan

beauty tips.. ஆயில் முகத்திற்கு ரோஜா பூ

nathan

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

nathan

கருமையை போக்கி, பொலிவை பெற இதோ டிப்ஸ்!!

nathan