அழகு குறிப்புகள்

இந்தியாவில் வீடுகளின் கிணறுகளில் தீப்பிழம்பு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள வீடுகளின் கிணறுகளில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிவது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி மற்றும் கூட்ட நாடு பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீரில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

இது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கிணறுகளில் இவ்வாறு தீப்பிழம்புகள் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில கிணறுகளில் பெற்றோல் வாசனை வெளிவந்த வண்ணம் உள்ளது.

 

அதேநேரத்தில் அதிகாரிகள் இந்தப் பகுதியில் உள்ள பெற்றோல் குதங்களில் இருந்து கிணறுகளில் பெற்றோல் கலந்து இருக்கலாம், அதன் மூலமும் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்கள்.

பாலக்காடு மாவட்டத்தில் கேரளாவிலேயே மிக அதிகமாக வெயில் கொடுமை அதிகரித்துள்ளது.

வெயில் கொடுமையால் ஏற்பட்ட வெப்பத்தின் விளைவாக தீ பிடித்து இருக்குமா எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்மையான காரணம் என்ன என்று இதுவரை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கிணற்றில் தீப்பிடித்து எரிவதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உல்லாசத்திற்கு அழைத்த முன்னாள் அமைச்சர் : ஸ்வப்னா சுரேஷ்

nathan

அடேங்கப்பா! தல தோனியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?

nathan

நம்ப முடியலையே…பணத்தையே மாலையாக அணிந்துள்ள வனிதா விஜயகுமார்!!

nathan

சூப்பர் டிப்ஸ் முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

nathan

சளி, இருமல் உங்கள பாடாய் படுத்துதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த அழகு குறிப்புகளை படுக்கச் செல்லும் முன்பாக பயன்படுத்தி பாருங்க….!

nathan

காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்கள் கட்டாயம் இத படிங்க!….

sangika

இதை ட்ரை பண்ணுங்க.! முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க வேண்டுமா?

nathan

யுவன் ஷங்கர் ராஜாவா இது.. மனைவி வெளியிட்ட போட்டோ

nathan