29.1 C
Chennai
Sunday, Aug 10, 2025
cover 1 1
மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின்னர் பெண்களால் வெளிக்கூற முடியாத கடுமையான வலிகள்!

பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் மட்டும் வலிகளை அனுபவிப்பதில்லை. பிரசவத்திற்கு பிறகும் கூட பெண்களுக்கு சில வலிகள் உண்டாகும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? குறிப்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் பின்னாளில் சற்று அதிகமாக சிரமப்படுவார்கள்.

இந்த பிரசவத்திற்கு பிறகு உண்டாகும் வலிகளால் பெண்கள் அசௌகரியமாக உணருகிறார்கள். இந்த பகுதியில் பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு உண்டாகும் 5 விதமான வலிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

1. மார்பக வலி

கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களின் மார்பகங்கள் சற்று அதிகமாகவே வளர்ச்சியடைந்திருக்கும். பின்னர் பால் கொடுக்க தொடங்கும் போது, குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால், தாய்க்கு பால் கட்டிக்கொள்ளும். இதனால் பெண்களுக்கு மார்பகத்தில் கடுமையான வலி ஏற்படும். மேலும் மார்பக காம்புகளில் உண்டாகும் புண்களினாலும் வலி உண்டாகும்.

2. பெண் உறுப்புகளில் வலி

பிரசவத்திற்கு பிறகு பெண் உறுப்புகளில் உள்ள காயங்கள் முழுமையாக குணமடைய சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். அதுவரை பெண் உறுப்புகளில் வலி இருக்கும். இது இயற்கையானது தான். குடல் அசைவுகளின் போது பெண்ணுறுப்பில் வலி உண்டாகும்.

3. நரம்புகளில் வலி

சில நேரங்களில் யோனிகளில் உண்டாகும் வலியையும், நரம்புகளில் உண்டாகும் வலியையும் பெண்களால் வேறுபடுத்தி காணமுடியாது. இந்த வலியால் அவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். அதுமட்டுமின்றி அவர்களால் நீண்ட நேரம் உட்காரவோ அல்லது குழந்தைக்கு பால் தரவோ மிக சிரமமாக இருக்கும்.

4. சிசேரியன் வலி

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் காயங்கள் ஆறும் அவரை முழுமையான ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயம். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது எடைகளை தூக்கமால் இருக்க வேண்டியது அவசியம்.

5. சிறுநீரகப்பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் வலிகள்

மகப்பேறுக்கு பிறகு இது பொதுவானது தான். ஆனால் பாக்டீரியாக்கள் சிறுநீரகப்பாதை வழியாகச் சென்று சிறுநீரகத்தை அடைந்தால், வலியும், எரிச்சலும் உண்டாகும்.

குறிப்பு:

பிரசவத்திற்கு பிறகு இந்த வலிகள் இருப்பது சாதாரணம் தான். இவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாமல் நீண்ட காலம் நீடித்தால் நீங்கள் மருத்துவரை அணுகி தீர்வு காண்பது சிறந்தது.

Related posts

உங்க குழந்தைக்கு இந்த அறிகுறியெல்லாம் இருந்தா அலட்சியப்படுத்தாதீங்க..

nathan

மூட்டுவலியால் அவதியா? வைக்கலாம் முற்றுப்புள்ளி?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் மார்பக வளர்ச்சிக்கும், வழுக்கைத்தலைக்கும் இந்த உணவு தான் காரணம்!

nathan

சூப்பரா பலன் தரும்!! ஆஸ்துமாவை விரட்டும் மூலிகை..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…’அங்க’ ரொம்ப அரிக்குதா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்!

nathan

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்

nathan

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

nathan

ஓர் இயற்கை மருந்து!.. எல்லா விதமான நோய்களும் விரட்டி விடலாம்.. நம் முன்னோர்கள் கண்டுபிடித்து..

nathan

பெண்களை அதிகளவில் பாதிக்கும் கருப்பை இறக்கம்

nathan