28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
doctor
மருத்துவ குறிப்பு

ஹார்மோன் மாற்றங்கள் உஷ்ணத்தால் பெண்கள் சந்திக்கும் உடல் பிரச்சனைகள்

உஷ்ணத்தால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட வயதில் அவர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்கள் உடலை அதிக சூடாக்கி கூடுதல் தொந்தரவுகளை தரக் கூடும்.

தைராய்டு பாதிப்பு கொண்ட பெண்கள் அதிக வெயிலாக இருந்தாலும், அதிக குளிராக இருந்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கர்ப்பகாலத்தில் மட்டும் தைராய்டால் பாதிக்கப்பட்டவர்களும், பாரம்பரிய தைராய்டு பாதிப்பு கொண்டவர்களும், தைராய்டு இருக்குமோ என்று சந்தேகப்படுகிறவர்களும் கோடை காலத்தில் ரத்த பரிசோதனை செய்து, தைராய்டு அளவை உறுதிசெய்துகொள்ளவேண்டும். தேவைப்பட்டால், டாக்டரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

தைராய்டு நோய்க்கு ஏற்கனவே மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், கோடைகாலத்தில் ஒருமுறை ரத்த பரிசோதனை மேற்கொண்டு மாத்திரையின் அளவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் சுகாதாரத்தில் அதிக அக்கறைகொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கினை மாற்றவேண்டும். மாதவிடாயை எதிர்பார்த்து நாப்கின் அணிந்துகொண்டு வெளியே செல்கிறவர்களாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் அதனை மாற்றிவிடுவது அவசியம். அதிக நேரம் ஒரே நாப்கினுடன் இருந்தால் அதில் ஏற்படும் ஈரப்பதம், வியர்வை போன்றவைகளால் தொற்று ஏற்படும். அதனால் தொடை இடுக்குப் பகுதியில் சொறி, தடிப்பு போன்றவை தோன்றும்.

நாப்கின் மாற்றுவதற்கு போதுமான சவுகரியம் இல்லாதவர்களும், நாப்கினால் அசவுகரியத்தை எதிர்கொள்கிறவர்களும் மென்ஸ்ட்டுரல் கப் பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேவையற்ற ரோமங்களை நீக்கவேண்டும். நீக்காவிட்டால் அந்த பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து வாடை வீசுவதோடு கிருமித்தொற்றும் உருவாகிவிடும். தினமும் குளித்து முடிந்ததும், வியர்வை தங்க வாய்ப்புள்ள உறுப்பு பகுதிகளை நன்றாக துடைத்துவிட்டு, ஈரம் அகன்றதும் மாய்ஸ்சரைசர் பூசிக்கொள்வது நல்லது.

வியர்வை தங்கும் பகுதிகளை நன்றாக சுத்தம் செய்தும் சொறியோ வேறு விதமான அவஸ்தைகளோ ஏற்பட்டால் சரும நோய் நிபுணரின் ஆலோசனைபடி அதற்குரிய மருந்துகளை பயன்படுத்தவேண்டும்.

மெனோபாஸ் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களும், மெனோபாஸ் காலத்தை சந்திக்கும் பெண்களும் வெயில் உஷ்ணத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தியே ஆகவேண்டும். அவர்கள் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும். அதிகம் வியர்க்காத அளவுக்கு பருத்தி ஆடைகளை அணியவேண்டும். தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது. அதிக அளவு மசாலாக்கள் சேர்க்காத, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உண்ணவேண்டும். வெண்ணெய் நீக்கிய மோரையும் தொடர்ந்து பருகிவர வேண்டும். உற்சாகத்தோடு அவர்கள் மனநலனையும் பாதுகாக்கவேண்டும்.

Courtesy: MalaiMalar

Related posts

எளிய மருத்துவம்-இய‌ற்கை வைத்தியம்!

nathan

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தவிப்பதற்கான காரணங்கள்!!!

nathan

இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!…

sangika

அதிக நேரம் கணினியில் வேலை செய்பவரா நீங்கள் ? : பிரச்சனைகளும் தீர்வுகளும்…!

nathan

சோம்பு நீரின் மருத்துவ குணங்கள்

nathan

பன்றி காய்ச்சலின் அறிகுறிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள வேண்டிய 15 தகவல்கள்!!!

nathan

அல்சரா… அலட்சியம் வேண்டாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா வயிற்றுப் புண்கள் நீக்க உதவும் இந்து உப்பு..!!

nathan

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan