தலைமுடி சிகிச்சை

பெண்களே என்ன பண்ணினாலும் பொடுகு போகலையா? இதோ அற்புதமான எளிய தீர்வு

தற்காலத்தில் தலை முடி சார்ந்த பிரச்சனைகளில் பொடுகுக்கு பெரும்பங்கு இருக்கிறது. பல லட்சம் பேர் இந்த தலையில் பொடுகு பிரச்சினையினால் உலக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

அதற்கான சிறந்த மருந்து நமது ஆயுர்வேத மருத்துவ முறையில் இருக்கிறது.

நம் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து வீட்டிலேயே தயாரிக்கும் மருந்தினை கொண்டு உங்களுடைய பொடுகு பிரச்சனைக்கு முடிவு கட்டலாம். [penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வேப்பிலை

  1. தோலில் ஏற்படக்கூடிய கிருமிகளின் பாதிப்பின் காரணமாக பொடுகு உருவாகிறது.
  2. அவற்றினை வேப்பிலை கொண்டு சுத்தப்படுத்த முடியும்.இது பல்வேறு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவ முறைதான்.
  3. இந்தியர்களின் தலைமுடி ஆரோக்கியத்திற்கு வேப்பிலை இன்றியமையாத ஒன்றாகும்.
  4. நீங்கள் ஏற்கனவே வேப்பிலையில் இருக்கக்கூடிய கிருமிநாசினி மற்றும் வைரஸ் எதிர்ப்பு குணநலன்களைப் பற்றி விரிவாக தெரிந்து இருப்பீர்கள்.
  5. அதனை தான் இங்கே நாம் படுத்தப் போகிறோம்.
  6. நீங்கள் வீட்டிலே வேப்பிலை எண்ணெய் தயாரிக்கலாம் அல்லது அருகில் உள்ள கடைகளில் சிறந்த வேப்பிலை எண்ணெயை வாங்கி தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வர பொடுகு பிரச்சனை நீங்கும்.
  7. அல்லது வேப்பிலை பேஸ்ட் உருவாக்க வேண்டும்.
  8. அதற்கு ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர் சேர்த்துக் கொண்டு அதில் வேப்பிலையை நன்றாக அரைத்து தயிரில் போட்டு கலந்து பின் உங்கள் தலையில் தேய்க்க வேண்டும்.
  9. 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருந்து பின் குளித்தால் உங்களுடைய பொடுகு பிரச்சனை நீங்கும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button