அழகு குறிப்புகள்

எலுமிச்சை சாறில் ஏன் உப்பு கலந்து குடிக்க வேண்டும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

எலுமிச்சை பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. மனிதர்களை பாதிக்கும் எல்லாவித நோய்களுக்கும் ஒரு மாற்று மருந்தாக எலுமிச்சை பழம் செயல்பட்டு வருகின்றது.

எலுமிச்சை சாறில் சர்க்கரை கலந்து குடிப்பதால் பல நன்மைகளை கிடைப்பது உப்பு கலந்து குடிப்பதாலும் பல நன்மைகளை தருகிறது. எவ்வளவு சோர்வாக இருந்தாலும் எலுமிச்சை சாறை குடித்தால் உடனடியாக புத்துணர்ச்சியை பெறலாம்.

எடையை குறைக்க காலையில் எலுமிச்சை தண்ணீர் சிறந்த பானமாக பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கிடையில் எலுமிச்சை சாறில் உப்பு சேர்த்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

நன்மைகள்:-

உடலில் உள்ள நச்சுக்களை போக்க இந்த பானம் உதவுகிறது. எலுமிச்சை நீரில் இருக்கும் சத்துக்களும், உப்பில் இருக்கும் மினரல்ஸ் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க உதவியாக இருக்கிறது.
இரவில் சரியான தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ தூங்கும் முன் எலுமிச்சையோ சாறில் உப்பு கலந்து குடித்து வந்தால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு சரியான தூக்கத்திற்கு வழிவகிக்கின்றது.
நீரிழிவு நோயில் கஷ்டப்படும் மக்கள் தினமும் உப்பு கலந்த எலுமிச்சை சாறை குடிப்பதால் சிறந்த பலனை கொடுக்கும். உப்பில் இருக்கும் எதிர்மறை அயனிகள் இதயத்துடிப்பை சீராக்குகிறது.

எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து குடிப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகள் நீக்கி உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும். இதனால் உடலில் சேர்ந்துள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button