24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
pregnancy 22
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணித்தாய் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

‘‘நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ, பிறந்த 48 மணி நேரத்துக்குள் குழந்தை கருப்பாக முதல் மலம் கழிக்க வேண்டும். இதுதான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அப்படி இல்லாவிட்டால் மலத்துவாரம் இருக்கிறதா என்று கவனியுங்கள். அடுத்தது, உங்கள் உடல்சூட்டிலேயே குழந்தையை வைத்திருங்கள்.

ஒரு மணி நேரத்திற்குள் ‘சீம்பால்’ என்று சொல்லப்படும் முதல்பால் கொடுப்பதை மறந்து விடாதீர்கள். பிறந்த குழந்தையின் உச்சந்தலை வழியாக வெப்பம் வெளியேறும் என்பதால் பிள்ளையின் தலையையும், கூடவே பாதத்தையும் மூடியே வைக்க வேண்டும்.’’

வீட்டிற்கு கொண்டு சென்றபிறகு என்ன செய்ய வேண்டும்?

‘‘குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், எவ்வளவு இடைவெளிகளில் தாய்ப்பால் எப்படி கொடுக்க வேண்டும் போன்ற விஷயங்களை மருத்துவமனைகளிலேயே சொல்லிக் கொடுத்து அனுப்புவார்கள். இதுதவிர, பச்சிளம் பாப்பா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

குழந்தையை குளிப்பாட்டும் போது பூப்போல கையாள வேண்டும். எண்ணெய் மசாஜ் செய்கிறேன் என்று தலையை தட்டுவது, மூக்கு, காதில் துணியால் சுத்தம் செய்வது, கண்களில் எண்ணெய் வைப்பது போன்ற தவறுகளை செய்யக் கூடாது.

குழந்தையின் உடல் முழுவதும் பவுடரைக் கொட்டினால், தொடை இடுக்குகளில் தங்கி மேலும் அழுக்கை அதிகரிக்கும். இதனால் அங்கு புண் வரலாம். அடுத்து குழந்தை மருத்துவர் பரிந்துரைப்படி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக அவசியம்.”

Courtesy: MalaiMalar

Related posts

அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் மோசமான உடல்நலக் கோளாறுகள்!!!

nathan

நம் பண்டைய மருத்துவ பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு பாரா முகம் ஏனோ?

nathan

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை போக்கும் கருஞ்சீரகம்

nathan

இளம்பெண்கள் – இளைஞர்களை தாக்கும் கழுத்து வலி

nathan

இருதயத்தை பாதுகாக்கும் வழிகள்

nathan

உங்களுக்கு இப்படி வர்ற கால் ஆணிய ஆரம்பத்துலயே எப்படி சரி பண்ணலாம்?

nathan

சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

nathan

உங்களுக்கு தெரியுமா ஈறு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் சில பழங்கால வழிகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…டியோடரண்ட் பயன்படுத்துவதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan