அழகு குறிப்புகள்

கொடூர சம்பவம்! காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த குழந்தையை கொன்ற தாய்!

காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த 3 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இளம் தாய்க்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்தக் கொடூர சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் திகதி இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரத்தில் நடந்தது.

நிக்கோலா ப்ரீஸ்ட் (Nicola Priest) எனும் 23 வயது இளம் பெண் தனது 3 வயது மகள் கெய்லி-ஜெய்டே யுடன் (Kaylee-Jayde) Solihull-ல் உள்ள Kingshurst House குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

நிக்கோலா, கால்லம் ரெட்ஃபெர்ன் (Callum Redfern) எனும் 22 வயது இளைஞனை காதலித்து வந்தார். கால்லம் பெரும்பாலும் நிக்கோலாவின் வீட்டில் இருப்பது வழக்கமாக இருந்தது.

 

இந்த நிலையில், 2020-ல் ஆகஸ்ட் 9-ஆம் திகதி நிக்கோலா தனது காதலனுடன் உறவில் இருந்தபோது, குழந்தை கெய்லி அறியாமல் அந்த அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

ஆத்திரம் அடைந்த இருவரும், தங்கள் உறவுக்கு மிகவும் இடையூறாக இருந்துவரும் கெய்லியை மிகக் கடுமையாக அடித்து அங்கேயே கொலை செய்தனர். கெய்லியின் நெஞ்சிலும் வயிற்றிலும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் குழந்தை துடுதுடித்து இறந்துவிட்டது.

 

சம்பவத்திற்கு பிறகு ஒரு மாதம் கழித்து, நிக்கோலா தனது டிக்-டொக் பக்கத்தில் “நான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன், நான் அப்படி செய்திருக்கக்கூடாது, அதே நேரத்தில் நான் வேறு எதையாவது செய்திருக்க வேண்டும்” என நடந்தவற்றை மறைமுகமாக வெளிப்படுத்தி தனது தாயிடம் மன்னிப்பு கேட்பது போல ஒரு விடியோவை வெளியிட்டார்.

பின்னர் விடயம் வெளியே தெரியவந்ததும், பொலிஸார் நிக்கோலா மற்றும் அவரது காதலன் கால்லம் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஒரு வருடமாக நடந்து வந்தது.

 

விசாரணையின் போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர். இருவரும் சேர்ந்து தான் இந்த கொடூர செயலை செய்துள்ளனர் என்பது உறுதியானது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நிக்கோலாவுக்கு 15 ஆண்டுகள் சிறையும், அவரது காதலனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி பிர்மிங்காம் கிரௌன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

குடும்ப வறுமை காரணமாக சேல்ஸ் கேர்ளாக இருந்த கார்த்தி பட நடிகை…

nathan

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

இப்படிப்பட்ட “பழங்களை” பயன்படுத்தினால் போதும், பொலிவோடும் இளமையோடும் கூடிய சருமத்தைப் பெறுவீர்கள்!

nathan

பப்பாளி பேஸ்ட் குளியல்

nathan

வயது வந்தவர்களுக்கு ஏற்படும் பருக்கள் பிரச்னை உங்களை வாட்டுகிறதென்றால் இதைப் படித்தால் நீங்கள் அறிந்து கொள்ளலாம்..

nathan

என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க டிப்ஸ்

nathan

இத படிங்க! வேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க

nathan

பானிபூரி பிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! உருளைக்கிழங்கில் மிதந்த புழு..

nathan

முயன்று பாருங்கள் இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

nathan