29.5 C
Chennai
Sunday, May 19, 2024
21 61481f41
அழகு குறிப்புகள்

பானிபூரி பிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! உருளைக்கிழங்கில் மிதந்த புழு..

பானிபூரியில் புழு மிதந்ததையடுத்து விற்பனையாளரை பொதுமக்கள் கம்பியில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பானி பூரி குறித்து பல சர்ச்சை செய்திகள் வெளியாகி வருகின்றது. பானி பூரி தண்ணீரில் சிறுநீர் கலப்பது, தவளை மிதப்பது போன்ற பல சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை பட்டரவாக்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் தொண்டர்கள் சாலையோரம் இருந்த பானிபூரி கடையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது உருளைக்கிழங்கில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை சோதனை செய்த போது அதில் புழு இருந்தது தெரிய வந்தது. மேலும் கெட்டுப்போன உருளைக்கிழங்கை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பொதுமக்கள் ஒன்றுதிரண்டு பானிபூரி விற்றுவந்த வடமாநில இளைஞரை கம்பியில் கட்டி வைத்து விசாரித்த போது இது போன்ற 15 கடைகள் உள்ளதாகவும் இதற்கு நான் முதலாளி இல்லை எனவும் கூறினார்.

வடமாநிலத்தவர்கள் இருபது நபர்கள் ஒரே வீட்டில் தங்கி பானிபூரி செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் வடமாநிலத்தவரை வெளுத்து வாங்கிய ஊர் பொதுமக்கள் உருளைக்கிழங்கு, பானிபூரியை கீழே கொட்டினர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இதை செய்யுங்கள்! தினமும் இரவில் தூங்கும் முன் பேஸ்பேக் முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாகும்.

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்களுக்கு தெரியுமா பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்..!

nathan

சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள

nathan

‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’ ஒரு இயற்கை மருந்து!…

sangika

காதை மிளிர வைப்பது எப்படி?

nathan

மிருதுவான சருமத்திற்கு

nathan

குழந்தைகளின் மூளை நரம்புகள் வலிமை பெற்று நினைவாற்றல் அதிகரிக்க இதை செய்யுங்கள்….

sangika

ஃபேஷியல்

nathan