24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
later
ஆரோக்கியம் குறிப்புகள்

அதிகாலை எழுதவதன் 5 பயன்கள்

மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன? அவற்றில் எதனை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.

உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் பசி எடுக்கும். காலையில் சாப்பிடுவதால், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும். மேலும், இரவு 9-10 மணிக்குள் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

காலையில் மாசற்ற தூய்மையான ஆக்சிஜனைச் சுவாசித்தால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்னைகள் வராது. அதிகாலை 4.30 – 5.30 மணிக்குள் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.

அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் மலம், சிறுநீர் கழிந்து, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும். உடல் நலனுக்கு மட்டுமல்ல. மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது.
later

Related posts

இந்த பொருட்களை வீட்டில் வெச்சிருந்தா உங்க அதிர்ஷ்டம் பிரகாசிக்குமாம்…

nathan

மல்லிகைப் பூ அழகிற்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! ஒவ்வொரு பெற்றோர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா? நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்….!

nathan

நீங்கள் குழந்தையை தூங்க வைக்க ரொம்ப சிரமப்படறீங்களா?… அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகள் மனதில் உங்கள் பிம்பம் என்ன?

nathan

இவ்வளவு அற்புத சக்தியா.. இனி எலுமிச்சம் பழத்தோலை தூக்கி போடாதீங்க..

nathan

முட்டை முடியில் எப்படி எல்லாம் தடவுவது…

nathan

அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan