later
ஆரோக்கியம் குறிப்புகள்

அதிகாலை எழுதவதன் 5 பயன்கள்

மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன? அவற்றில் எதனை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.

உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் பசி எடுக்கும். காலையில் சாப்பிடுவதால், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும். மேலும், இரவு 9-10 மணிக்குள் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

காலையில் மாசற்ற தூய்மையான ஆக்சிஜனைச் சுவாசித்தால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்னைகள் வராது. அதிகாலை 4.30 – 5.30 மணிக்குள் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.

அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் மலம், சிறுநீர் கழிந்து, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும். உடல் நலனுக்கு மட்டுமல்ல. மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது.
later

Related posts

உங்களுக்கு தெரியுமா பேசியே மயக்குவது என்பது இந்த 5 ராசிகளுக்கும் கைவந்த கலையாகும்!

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஆடைகள் வாங்கும் போது பெண்கள் செய்யும் தவறுகள்

nathan

அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்க சில டிப்ஸ்…

nathan

இவ்ளோ இருக்கா மணத்தக்காளி கீரைல .?

nathan

அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்..!

nathan

மாதுளை இலையில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளதா?

nathan

உங்களுக்கு தெரியுமா வயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்…!!

nathan

இதோ 5 சூப்பர் டிப்ஸ்! எதிர்மறை சிந்தனை அதிகமா வருதா? நேர்மறையா சிந்திக்க ஆசையா?

nathan