28.6 C
Chennai
Friday, Dec 12, 2025
245fb885defa
ஆரோக்கிய உணவு

உண்மை என்ன ?உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

சமைக்கும் உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?
உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?
சமைக்கும் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

உணவுப்பொருட்கள் மற்றும் இறைச்சி வாங்கிவந்தால் அவற்றை சரியான வெப்பநிலையில் சேமித்துவைக்க வேண்டும். அப்போதுதான் அவை கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்கும். நுண்ணுயிரிகளால் பாதிப்பும் நேராது. சமைத்த உணவுகளை இரண்டு மணி நேரத்திற்கு மேல் திறந்த நிலையில் வைக்கக்கூடாது. விரைவில் கெட்டுப் போகும் உணவுகளை குளிர் சாதன பெட்டியில் 5 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம்.

சமைத்த இறைச்சி வகைகளை குளிர் சாதன பெட்டியில் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. அதன் வாசம் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் மற்ற பொருட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிலர் இறைச்சி வகைகளை அதிகமாக வாங்கி வந்து அவ்வப்போது பயன்படுத்துவார்கள். அப்படி வாங்கி வந்த இறைச்சியையும், சமைத்த இறைச்சியையும் அருகருகே வைக்கக்கூடாது. இரண்டையும் வெவ்வேறு இடங்களில் வைத்திருப்பது தான் நல்லது.

ஏனெனில் முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் இருக்கலாம். அவற்றை சமைத்த இறைச்சியோடு சேர்த்து வைத்திருந்தால் தொற்று ஏற்படவழிவகுத்து விடும். அவற்றுள் இருக்கும் நுண்ணுயிரிகள் சமைத்த உணவுக்கும் கேடுவிளைவித்து விடும்.

முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளை சமைக்கும்போது குழம்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவை நன்றாக வேகவைக்கப்படவில்லை என்று அர்த்தம். நன்றாக சமைத்தால் தான் தீங்குவிளைவிக்கும் நுண் கிருமிகள் இறந்துபோகும். 70 டிகிரி வெப்ப நிலையில் சமைத்தால்தான் அது நன்றாக சமைக்கப்பட்ட உணவு என்பது சமையல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

சமைக்கும்போது இறைச்சியை நன்றாக சுத்தம் செய்வதோடு கைகளையும் நன்றாக பராமரிக்க வேண்டும். சமையல் அடுப்பின் மேல்பகுதியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் முன்பு கைகளை கழுவ வேண்டியதும் அவசியம். கரப்பான் பூச்சிகள் மற்றும் பிற பூச்சி இனங்களிலிருந்து சமையலறையைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அவைதான் தீங்கு விளைவிக்கும் தொற்று நோய்களுக்கு முதன்மை காரணியாக அமைந்திருக்கும். உணவு தயாரிக்கும் போது எப்போதும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சுத்தமில்லாத நீர் உணவை மாசுபடுத்தும். தொற்றுநோயை ஏற்படுத்தும். உணவுப் பொருட்களை கழுவும் போது நன்றாக வடிகட்டிய நீரைப் பயன்படுத்த வேண்டும்.

maalaimalar

Related posts

உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள்!!!

nathan

கோடை வெப்பத்தை சமாளிக்க… தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் தினமும் சாப்பிட கூடிய இந்த காய்கனிகள் எவ்வளவு விஷத்தன்மை வாய்ந்ததுனு தெரியுமா…?

nathan

உங்களுக்கு தெரியுமா இவர்கள் வாழைப்பழத்தை தொட்டு கூட பார்க்க கூடாதாம்!

nathan

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட் …!

nathan

இந்த ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மற்றம் என்ன எனத் தெரியுமா ?

nathan

சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க…இரவு தூங்கி எழுந்த பின் காலையில் எத்தனை மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்!!!

nathan