33.2 C
Chennai
Friday, Aug 15, 2025
sweetpotatoes
மருத்துவ குறிப்பு

உடலுக்கு பலம் தரும் சர்க்கரைவள்ளி

தோல் நோய்களுக்கு மருந்தாவதும், கண்களுக்கு நல்ல பார்வையை கொடுக்க கூடியதுமான மரவள்ளி கிழங்கு, உடலுக்கு பலம் தரக்கூடியதும், தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியதுமான சர்க்கரை வள்ளி கிழங்கின் பயன்களை அறிவோம்.

மரவள்ளி கிழங்கிற்கு ஏழிலை கிழங்கு என்ற பெயர் உள்ளது. ஏழு இதழ்களை பெற்று இருப்பதால் அந்த பெயரை பெற்றுள்ளது. மரவள்ளி கிழங்கு ஏழைகளின் உணவு. சரிவிகித உணவான இதில், வைட்டமின் ஏ சத்து மிகுந்து காணப்படுகிறது. மரவள்ளி கிழங்கு கண்களுக்கு தெளிவான பார்வையை தரும் தன்மை கொண்டது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. உடலுக்கு ஊட்டசத்தாகிறது.

மரவள்ளி கிழங்கின் இலை விஷக்கடிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. இலையை பசையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதை தேள், பூச்சி கடிவாயில் வைத்து கட்டுவதால் விஷம் முறியும். வலி, வீக்கம் குறையும். மரவள்ளி கிழங்கை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். மரவள்ளி கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.

அதில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஞ்சி போன்று தயாரிக்க வேண்டும். கஞ்சியை ஆற வைத்து அரிப்பு இருக்கும் இடத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து அதை துடைத்து விடலாம். இவ்வாறு செய்தால் அரிப்பு, தடிப்பு சரியாகும். மரவள்ளி கிழங்கு புரதச்சத்தை மிகுதியாக கொண்டுள்ளது. மாவுச்சத்தை அதிகம் பெற்றுள்ளது. இதில் வைட்டமின் ஏ,பி உள்ளது. கண்களுக்கு மருந்தாகிறது. எலும்புக்கு பலத்தை தருகிறது. உடல் எடையை கூட்டும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். சிறுநீரை பெருக்கும். பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். சர்க்கரை வள்ளி கிழங்கு இலைகளை பயன்படுத்தி தொழுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 5 இலைகளுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிக்கலாம். இதன் இலையை பற்றாக போட்டால் புண்கள் ஆறும். சர்க்கரை வள்ளி கிழங்கில் இருந்து குளுக்கோஸ் தயாரிக்கப்படுகிறது. இது நல்ல உணவாகிறது. இலைகள், கிழங்குகள் தோல்நோய்க்கு மருந்தாகிறது. தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியது.

சர்க்கரை வள்ளி கிழங்கை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் உணவு தயாரிக்கலாம். வேகவைத்த கிழங்கு, தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய், நெய் எடுத்துக்கொள்ளவும்.சர்க்கரை வள்ளி கிழங்குடன், சிறிது ஏலக்காய் பொடி, வெல்லம் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் எடுத்து கொண்டு அதை உருக்கவும். அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். இதனுடன் சர்க்கரை வள்ளி கிழங்கு கலவையை சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். போலி, கொலுக்கட்டை போன்றவற்றுக்கு பூரணமாகவும் பயன்படுத்தலாம்.. வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கின் இனிப்பு சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கிழங்கு உடலுக்கு பலம் தரக் கூடியது.
sweetpotatoes

Related posts

‘ரான்சம்’ இணையத் தாக்குதல் – அமெரிக்க பாதுகாப்பு துறையின் அசட்டையா ?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலையின் சில முக்கிய நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா சுண்டைக்காயின் அற்புத மருத்துவக் குணங்கள்!

nathan

nathan

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்ன காரணம்?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு!

nathan

பருவ பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் இரத்த சோகை

nathan

ஆயுர்வேத விதிகளின்படி உடல் எடையை மேலும் மேலும் குறைப்பது எப்படி என்று தெரியுமா?

nathan

உங்களுக்கு இரத்தம் சுத்தமாக இல்லை என்றால் என்னவாகும் தெரியுமா?

nathan