36.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
மருத்துவ குறிப்பு

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்

இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபினின் அடர்த்தி குறைவதே இரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. இந்த இரத்தசோகையினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இரும்புசத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சோர்வடைந்துவிடுகிறது.

மேலும் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்தசோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.

1. மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.

2. சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு, உணவு செரிமானமாகாமல் இருத்தல், உடல் வெளுத்துக் காணப்படுதல்.

3. முகத்தில் வீக்கம் உண்டாதல், நகங்களில் குழி விழுதல்.

4. கண்குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல்.

5. உடல் நலம் சரியில்லாதது போன்ற உணர்வு.

6. மூச்சுவிடுவதில் சிரமம்.

7. இதயம் வேகமாகத்துடிப்பு அல்லது தாறுமாறாகத் துடிப்பது.

8. குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை.

– போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க மாதவிடாய் காலங்களில் இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

Related posts

பெண்ணின் கருவளம் மிக்க நாட்களை கண்டறிவது எப்படி?

nathan

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

nathan

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயது எது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

காய்ச்சலுக்கான அட்டகாசமான 10 வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கங்காய்

nathan

மேனியின் பளபளப்பை அதிகரிக்க ஸ்கின் லோசனை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்……

sangika

பகலில் தூங்குவது நல்லதா?

nathan

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது என்ன வியாதி?

nathan

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது ஐரோப்பிய பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

nathan