25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
Baby getting immunisation
மருத்துவ குறிப்பு

தடுப்பூசிகள் டாக்டர் என்.கங்கா

குழந்தை பிறந்த 45 நாட்கள் ஆனவுடன் முத்தடுப்பு ஊசி, போலியோ சொட்டு மருந்து (முதல் தவணை) தரப்படவேண்டும். இப்போது DPT எனப்படும் Triple Antigen, HIB எனப்படும் மூளைக் காய்ச்சல் தடுப்பு ஊசி, B வகை மஞ்சள் காமாலைத் தடுப்பு எல்லாம் சேர்ந்து Pentavalent என்ற ஊசி அரசுத்துறை மூலம் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளிலும் போடலாம். இந்த முத்தடுப்பு ஊசி (acellular DPT) வலி இல்லாததது. சிறிது வலி ஏற்படுத்தக் கூடியது (whole cell DPT) என்று இரண்டு வகைகள் உள்ளன. வலி இல்லாதது விலை அதிகம். கிடைப்பதும் அரிதாக உள்ளது. அதிகம் விலைகொடுத்தாலும் அதனால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி சுமார் 10 வருடங்கள் தான் நிலைக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. எனவே தடுப்பு ஊசி போட்டு 24 மணி நேரம் வரை தொடைப்பக்கம் வலி, வீக்கம் லேசான காய்ச்சல், சிணுங்கல், அழுகை, இருந்தாலும் சாதாரண தடுப்பு ஊசிதான் நல்லது.

ஓரிரு நாட்கள் குளிக்க வைக்கக் கூடாது. காய்ச்சல், மற்றும் வலிக்கு மாத்திரைகள் மருத்துவர் தருவார். ஊசி போட்ட இடத்திற்கு வெந்நீர் அல்லது ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கூடாது. அழுத்தித் தேய்க்கவும் கூடாது. ஊசி போட்ட தொடைப் பகுதியில் 2-3 வாரத்திற்கு ஒரு சிறு உருண்டை போல வீக்கம் இருக்கலாம். இது தானாக மாறிவிடும்.

குழந்தைக்கு வலிப்பு நோய், மூளை வளர்ச்சி பாதிப்பு போன்ற மருத்துவக் காரணங்கள் இருந்தால் விலை அதிகமான ஊசியை மருத்துவர் பரிந்துரை செய்வார். குழந்தைக்கு 30 நாட்கள் முடியும் வரை அந்த சொட்டு மருந்து ஜீரண மருந்து எதுவும் தேவையில்லை. இரண்டு மாதத்திலிருந்து Vitamin D சொட்டு தினமும் வெறும் வயிற்றில் 400 IV தரப்பட வேண்டும். குழந்தைக்கு ரத்த சோகை இருந்தால் இரும்பு சத்து சொட்டு மருந்து (Iron drops) தரப்பட வேண்டும். இவற்றை மருத்துவரே அறிவுறுத்துவார்!

2-3 மாதங்களில் குழந்தை ஆ, ஊ என்று குரல் கொடுக்க ஆரம்பிக்கும். இந்த பாஷைக்கு cooing என்று பெயர்! ஆமாம்! குயிலின், கிளியின் கூவலாகத் தான் இந்த மொழியை நாம் அனுபவிக்க வேண்டும். எதிர்க்குரல் கொடுத்தால் (எசப்பாட்டு படித்தோமானால்) குழந்தையிடம் நல்ல ரெஸ்பான்ஸ் தெரியும்! செய்து பாருங்களேன். விடிகாலை நான்கு மணிக்கு விழித்துக் கொண்டு கை கால்களை உதைத்து ஆ ஊவென்று சப்தமிடும் குழந்தையிடம் நிறையப் பேசுங்கள்.

3 மாதங்கள் முடிவதற்குள் குழந்தை விரல் சப்ப ஆரம்பிக்கலாம். இது பசியின் அறிகுறி அல்ல! இயற்கை நிகழ்வு. தானாக மாறும். இது oral phase of learning என்பதன் முதல்படி. விரல்களைச் சப்பும்போது குழந்தைக்குச் சில விஷயங்கள் தெரிகின்றன. இது கெட்ட பழக்கம் என்று விரலை எடுத்து விலக்கி விடாதீர்கள்! ஒரு வயதில் இந்தப் பழக்கம் தானாக மாறிவிடும்!

குழந்தை ஒருக்களித்துப் படுக்க ஆரம்பிக்கும். யாராவது அதன் பக்கமாக நடந்து போனால் அந்த திசையை நோக்கி கண்களை ஓட்ட ஆரம்பிக்கும்.
பாப்பாவுடன் உங்கள் பாசப்பிணைப்பு அதிகரிக்க, நீடிக்க, கண்ணோடு கண் பாருங்கள்! பேசுங்கள்! முத்தம் மட்டும் உள்ளங்கால்களில்தான்!
Baby getting immunisation

Related posts

ஆண் மைக் குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்து, மாத்திரைகள் – ஷாக் ரிப்போர்ட்!!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இளம் பெண்கள் தவறாமல் எடுக்க வேண்டிய 6 பரிசோதனைகள்!!!

nathan

பெண்களுக்கு ஏற்படும் இந்த ஆபத்தான பிரச்சனையை சரி பண்ண…

nathan

நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களை விரும்பாத ஆண்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை!!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சாக்லேட் சாப்பிட்டா சர்க்கரை நோய் வருமா? அலசுவோம்

nathan

உங்களுக்கு தெரியுமா உயிரை பறிக்கும் நோய்களை கூட விரட்டியடிக்குமாம் ஸ்டெம்செல்!!!

nathan

இல்லற வாழ்க்கை சுமுகமாக தொடர்வதற்கு மனைவியை ரசியுங்கள்..

nathan

கருச்சிதைவு அபாயத்தை எது அதிகரிக்கிறது

nathan